• புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினருக்கு தெளிவூட்டல்

    புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினருக்கு தெளிவூட்டல்

    புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்களைத் தெளிவூட்டும் வகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஜூலை 30ஆம் திகதி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

    புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக இதன்போது பிரதமர் அவர்களினால் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான தெளிவூட்டல் மேற்கொள்ளப்பட்டது.

    புதிய கல்விச் சீர்திருத்தத்தினூடாக மேற்கொள்ளப்படும் பாட விதான மறுசீரமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு, மொடியுள் மற்றும் செயற்பாடுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தமது கருத்துக்களை முன்வைத்தது.

    இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பில் பிரதமர் தனது கவனத்தைச் செலுத்தியதோடு, புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக முன்வைத்த புதிய கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

    கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ உள்ளிட்ட அரச அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

    ஊடக பிரிவு

    Upendra Lakmali

    2025-08-01
    கல்வி, கல்விச் சீர்திருத்தம்
    செய்தி
  • சீர்திருத்தம் 2026 இல் நடைமுறைப்படுத்தப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே, அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும்.

    சீர்திருத்தம் 2026 இல் நடைமுறைப்படுத்தப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே, அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும்.

    ஆசிரியர் பேசுகின்ற பிள்ளைகள் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சம்பிரதாய முறைக்கு 50 நிமிட காலப்பகுதி என்று பார்த்திருக்க வேண்டாம்.

    திசைகாட்டி அரசாங்கத்திற்கு மொடியுள்களுக்கான பேடன்ட் உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இல்லை.

    – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

    2026ஆம் ஆண்டில் தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கு மாத்திரம் புதிய கல்விச் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்படுவதால் அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும், ஆசிரியர் பேசுகின்ற பிள்ளைகள் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சம்பிரதாய கற்றல் செயற்பாட்டில் இருந்துகொண்டு 50 நிமிட காலப்பகுதி தொடர்பாக விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

    புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் சபரகமுவ மாகாண கல்வி அதிகாரிகளைத் தெளிவூட்டும் வகையில் இன்று (26) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது பிரதமர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

    இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பின்வருமாறு தெரிவித்தார்.

    தற்போதுள்ள கல்வி முறைமை நூற்றுக்கு நூறு விதம் தவறானது என்று நாம் கூறவில்லை. இந்தக் கல்வி முறைமையினுடாக திறமையானவர்கள் உருவாக்கப்பட்டார்கள். எனினும் வருடந்தோறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இடைவிலகிச் சென்றார்கள். அவர்கள் தொடர்பில் யாரும் கரிசனை கொள்ளவில்லை. புதிய கல்விச் சீர்திருத்தமானது இதுவரையில் காணப்பட்ட பாடவிதான மேம்பாட்டுக்கு அப்பாற் சென்று ஒட்டுமொத்த கட்டமைப்பினையே மறுசீரமைக்கின்றது.

    2026ஆம் ஆண்டில் இந்த முறைமை அறிமுகம் செய்யப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே. அதற்கான அடிப்படை முன்னுரிமை பெற்றுக் கொடுக்கப்படும். படிப்படியாக அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். கல்விச் செயற்பாட்டினுள் இருக்கும் தீர்மானமிக்க காரணியாகத் திகழ்பவர் ஆசிரியரே. ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முறையான ஆசிரிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஆசிரிய சமநிலையை உரிய முறையில் பேணுதல் வேண்டும்.

    சபரகமுவ மாகாணத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கை 10ஐ விடவும் குறைவாக உள்ள பாடசாலைகளும் உள்ளன. சில பாடசாலைகளில் ஒரு ஆசிரியருக்கு உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆகும். இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்பொழுது அமைச்சில் இடம்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் அது பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    2024ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது தெரியவந்த ஒரு விடயம், 20,000 பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். இன்றும் அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. அதேவேளை 80,000 மாணவர்கள் முறையாக பாடசாலைக்கு வருகை தருவதில்லை. இதுவும் பாரியதொரு பிரச்சினை ஆகும்.

    தற்பொழுது கல்விக் கட்டமைப்பானது ஒரு சிலரின் அர்ப்பணிப்பின் மீதே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நபரின் தோளின் மீது கல்விக் கட்டமைப்பு செயற்பட முடியாது. ஒரு கட்டமைப்பாக வலுவான நிலையில் அது இயங்க வேண்டும்.

    தற்பொழுது காலஅட்டவணையை 50 நிமிடங்கள் வரையில் நீடித்தமை தொடர்பில் இடம்பெறுகின்ற ஒரு கலந்துரையாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பிரதாய கற்றல் முறைமைகளில் இருந்து கொண்டு இந்த நேரத்தைப் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டாம். ஆசிரியர்கள் பேசுகின்ற பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருக்கின்ற முறைமையல்ல புதிய கல்விச் சீர்திருத்தத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. செயற்பாட்டு ரீதியில் பிள்ளைகளை பங்குகொள்ளச் செய்யும் ஒரு முறைமையாகும்.

    மொடியுள் முறைமையை அறிமுகம் செய்வது திசைகாட்டி அரசு மொடியுள்களுக்கான பேடன்ட் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காகவல்ல, அது இன்றைய உலகம் பயன்படுத்துகின்ற ஒரு முறைமையாகும்.

    இதுவரை காலம் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமது பெயரைப் பிரசாரம் செய்து கொள்வதற்காகவே கல்வியை பயன்படுத்தியுள்ளதாகவும், வாக்குகளைப் பெறும் குறிக்கோளுடன் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொண்டதன் காரணமாக கல்வியானது மேலும் குழப்பகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த நிலைமை தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

    இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன அவர்கள்,

    யாரோ ஒரு தரப்பினருடைய தேவையின் பொருட்டு நாம் கல்விச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் புத்திஜீவிகளின் அறிவினைப் பயன்படுத்தவில்லை எனவும் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாம் அதனை முழுமையாக நிராகரிக்கின்றோம். நாம் யாருடைய தேவைக்காகவும் அல்ல, தேசிய தேவைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். அவர்கள் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யும் தகவல்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கும் இடையில் எதுவிதமான தொடர்பும் இல்லை என்ற விடயத்தினை நாம் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    இந்த நிகழ்விற்கு சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்து உத்தியோகத்தர்களும் மாகாணத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ஊடகப் பிரிவு

    Upendra Lakmali

    2025-07-27
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி
  • மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு நாம் தயார்.

    மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு நாம் தயார்.

    எனது பிள்ளைப் பருவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

    மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு தாம் தயார் எனவும், தமது பிள்ளைப் பருவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

    இன்று (26), இரத்தினபுரி, சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை பார்வையிட்ட பிறகே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

    “தற்போதைய பாடசாலைக் கல்விச் சீர்திருத்தம் மூலமாக உலகைக் காணும் பிள்ளைகள் எதிர்காலத்தில் புவியியல் சார்ந்த சவால்களை வெற்றிகொள்ளத் தயாரா?” எனும் தலைப்பின் கீழ் மாணவர் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுபெற்றதன் பின்னர் பிரதமரின் கரங்களால் பிள்ளைகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

    அதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

    புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக பெரியவர்களை விடவும் கூடிய தெளிவினை மாணவர் பாராளுமன்றப் பிள்ளைகள் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் மிகச் சிறப்பாக பகுப்பாய்வு செய்திருந்தனர். அதிலுள்ள நன்மை-தீமைகள், சவால்கள் தொடர்பில் மாணவர் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பான வகையில் நீங்கள் விடயங்களை முன்வைத்தீர்கள். உண்மையில் நான் ஒரு விடயத்தை முன்மொழிகிறேன். நீங்களும் இதைப் பற்றி பேசுங்கள், இந்த கல்விச் சீர்திருத்தம் என்பது அமைச்சிலுள்ள உத்தியோகத்தர்கள் அல்லது அமைச்சர்கள் மாத்திரம் இணைந்து தயாரிக்கும் ஒன்றாக இருக்க முடியாது. இக்கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு நாட்டில் இடம்பெறும் கலந்துரையாடலினூடாக நாம் இணைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்கு நேரடியாக இளம் சந்ததியினர், மாணவ மாணவிகள் இணைந்து கொள்ள வேண்டும். எனவே நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் விசேட பாராளுமன்ற அமர்வொன்றினை நடத்தியேனும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக உங்களது வயதினைச் சார்ந்த ஏனைய மாணவ மாணவிகளிடம் கருத்துக்களைப் பெற்று எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

    எனக்கு பாடசாலை மாணவியொருவர் சூழல் நேயமிக்க கருத்திட்ட முன்மொழிவொன்றினை ஒப்படைத்தார். அந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.

    மாணவர் பாராளுமன்றத்தின் இன்றைய விவாதத்தில் அமைச்சர் ஒருவர் ஆற்றிய உரை என்னை மிகவும் கவர்ந்தது. அதுதான் பிள்ளைப் பருவத்தினரின் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசுகின்ற பெரியவர்கள் எமது பிள்ளைப் பருவத்தை அழித்து விடுகின்றனர் எனத் தெரிவித்தார். நான் இன்று ஒரு தீர்மானத்தை எடுத்தேன், இனிமேல் எனது பிள்ளைப் பருவத்தைப் பற்றி நான் பிள்ளைகளுடன் கதைப்பதில்லை, அதற்குப் பதிலாக இந்நாட்டின் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

    அதேபோல் நீங்கள் அனைவரும் மாணவர் பாராளுமன்ற அமர்வினை முகாமைத்துவம் செய்த விதம், அதேவேளை உரையாற்றி விதம் என்பவற்றைப் பார்க்கின்ற போது, அவற்றைக் கேட்கின்ற போது மனதுக்கு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் தோன்றியது. எதிர்கால நாட்டைப் பற்றிய ஒரு நம்பிக்கை எழுந்தது. எதிர்கால சந்ததியினர் முன்னேற்றகரமானவர்கள், எதிர்கால சந்ததியினர் மிகவும் திறமையானவர்கள் என்று.

    அதிபர் உள்ளிட்ட ஆசிரிய குழாத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் இத்தகையதொரு பிள்ளைச் சமூகத்தை உருவாக்கியமை தொடர்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

    புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பத்மகுமார, சுனில் ராஜபக்‌ஷ, வைத்தியர் ஜனக, மாகாண கல்விப் பணிப்பாளர், மாவட்டத்தின் கல்வி அதிகாரிகள், சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் நீல் தம்மிக வத்துகாரவத்த உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

    ஊடகப் பிரிவு

    Upendra Lakmali

    2025-07-26
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி
  • இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கணிய அளவையியல் மற்றும் ஆங்கில டிப்ளோமாக்களுக்கு NVQ 6 சான்றிதழை வழங்க அங்கீகாரம்

    இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கணிய அளவையியல் மற்றும் ஆங்கில டிப்ளோமாக்களுக்கு NVQ 6 சான்றிதழை வழங்க அங்கீகாரம்

    இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SLIATE) நடத்தும் இரண்டு உயர் தேசிய டிப்ளோமா கற்கைகளான கணிய அளவையியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDQS) மற்றும் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDE) ஆகியவற்றிற்கு NVQ மட்டம் 6 இற்கு சமமான தரச் சான்றிதழை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    2025 ஜூலை மாதம் 8ஆந் திகதி நடைபெற்ற 2025/05/303ஆம் இலக்க ஆணைக் குழு கூட்டத்தின் போது, மேற்படி இரண்டு கற்கைகளும் NVQ மட்டம் 6 தரநிலைகளுக்கு இணங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கணிய அளவையியல் மற்றும் ஆங்கில டிப்ளோமா கற்கைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்கின்றவர்களுக்கு NVQ மட்டம் 6 இற்கு சமமான சான்றிதழை வழங்குவதற்கு, விண்ணப்பதாரர்கள் SLIATE பணிப்பாளர்/அதிபர்/பணிப்பாளர் நாயகம் ஆகியோரால் சான்றுப்படுத்தப்பட்ட இறுதிச் சான்றிதழின் பிரதியுடன் ரூ. 1000.00 கட்டணத்துடன் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான சுற்றறிக்கை 2025.07.09 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

    NVQ_Circular – 04/2025பதிவிறக்கவும்

    Upendra Lakmali

    2025-07-23
    கல்வி
    செய்தி
  • ஆசிரியர் பயிலுனர்களுக்கு அழுத்தமற்ற கற்றல் சூழலை உருவாக்கத் துரித நடவடிக்கை!

    ஆசிரியர் பயிலுனர்களுக்கு அழுத்தமற்ற கற்றல் சூழலை உருவாக்கத் துரித நடவடிக்கை!

    -கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன.

    தேசிய கல்விப் பீடங்களில் கல்வி கற்கும் ஆசிரியர் பயிலுனர்களுக்கு அழுத்தமற்ற கற்றல் சூழலை உருவாக்குவதற்கும், கல்வி பீடங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும்மான ஒரு செயல் திட்டத்தைச் செயல்படுத்துவதைப் பற்றித் தனது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன தெரிவித்தார். பத்தரமுல்லை, கல்வி அமைச்சு வளாகத்தில், தேசிய கல்வி பீடங்களின் பீடாதிபதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

    இந்த கலந்துரையாடலில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து கல்வி பீடங்களின் பீடாதிபதிகளும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு கல்விப் பீடத்திற்கும் தத்தமது கல்வி மற்றும் கல்வி சாரா பிரச்சினைகள், உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் பயிலுனர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவதற்காக இதுவரை கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளுக்குத் நமது விசேட கவனத்தை செலுத்துவதாகவும், முக்கியமான பிரச்சினைகள் காணப்படுகின்ற கல்விப் பீடங்களுக்குக் தனது கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு துரித தீர்வுகளைப் பெற்றுத் தர இருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

    இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,

    ஆசிரியர் பயிலுனர்களுக்கு சுதந்திரமான கற்றல் சூழலை உருவாக்குவதும், அவர்களின் மனநல நல்வாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பதும் எதிர்காலத்திற்கான முதலீடாகும். ஏனெனில் எதிர்காலத்தில் அவர்களே பாடசாலை ஆசிரியர்களாக மாணவர்களிடையே செல்லவுள்ளார்கள். அவர்களின் மனநலத்தை மேம்படுத்துவதற்காக ஆலோசனை சேவைகளை வலுப்படுத்த நாம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம், எனத் தெரிவித்தார்

    இந்த நிகழ்வில் ஆசிரியக் கல்விக்கான பிரதம ஆணையாளர் திருமதி இரோஷினி கே. பரணகம மற்றும் கல்வி அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    Upendra Lakmali

    2025-07-21
    கல்வி
    செய்தி
  • அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப்
    பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம்
    2025 ஆம் ஆண்டுக்கான

    அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம்2025 ஆம் ஆண்டுக்கான

    5,171 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை சீருடைக்குத் தேவையான சீருடைத் தொகையையும், சீன அரசின் அன்பளிப்பாக வழங்கியதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, ஜூலை 16 ஆம் திகதி பத்தரமுல்லை கல்வி அமைச்சில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்பில் நடைபெற்றது.

    அப்பொழுது 2025 ஆம் ஆண்டிற்குத் தேவையான மொத்த சீருடைத் தேவையும் வழங்கப்பட்டு முடிந்ததை அறிவிப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையே இடம்பெற்றது.

    ஏற்கனவே, 2026 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலை சீருடைத் தொகையையும் அன்பளிப்பாகப் பெற்றுத் தருமாறு சீனாவிடம் தமது கோரிக்கையை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஊடாக மக்கள் சீனக் குடியரசின் இலங்கை சீனத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர்,
    “இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இருந்து வருவது ஒத்துழைப்புடன் கூடிய நீண்டகால நட்பாகும். எனது நாட்டின் பாடசாலை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த சீருடையும் அந்த நீண்டகால நட்பின் ஓர் அங்கமே ஆகும்.

    2023 – 2024 ஆண்டுகளிலும் சீன அரசு எமது பாடசாலை சீருடைத் தேவையில் கணிசமான பகுதியைக் கொடுத்ததோடு, 2025 ஆம் ஆண்டின் முழு சீருடைத் தேவையையும் எமது நாட்டின் ஒட்டுமொத்தப் பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

    இலங்கைக்கு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது, எமது மாணவர் சமுதாயத்தின் கல்வியை முன்னெடுப்பதற்காக சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற அந்த நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்.
    2026 ஆம் ஆண்டிற்காகவும் சீன அரசின் இந்த தொடர்ச்சியான உதவியை எமக்குப் பெற்றுத் தருமாறு ஏற்கனவே எமது அரசு சீன அரசாங்கத்திடம் கோரியிருக்கிறது.
    இத்தருணத்தில் நான் எமது நாட்டின் பிள்ளைகளின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் சீன அரசுக்கும், மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் கூறினார்.

    இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதர் Qi Zhenhong அவர்கள்,

    “இலங்கைக்கு உதவி தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் சீனா உங்களது நம்பிக்கைக்குரிய சகோதரனாகவும் உதவியாளனாகவும் செயல்படும். இலங்கையின் குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, சீன இலங்கை நட்பின் வாரிசுகளும் ஆவர்.

    அவர்களின் சீருடையிலுள்ள ஒவ்வொரு தையலிலும், பழமையான நமது இரு நாட்டு நாகரிகங்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் கதையும் பின்னிப் பிணைந்திருக்கும். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அம்மையார் கொடுக்கும் பங்களிப்பையும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்,” எனத் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் இலங்கை சீனத் தூதரக அதிகாரிகளும், கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.

    Upendra Lakmali

    2025-07-17
    கல்வி
    செய்தி
  • தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடத்திட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் பல புதிய சீர்திருத்தங்கள்.

    தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடத்திட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் பல புதிய சீர்திருத்தங்கள்.

    – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பள்ளிக் கல்வி முறையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்காக பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய ஜூலை 09 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    இந்தப் புதிய திருத்தங்களின் கீழ், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொழிற்கல்வி பாடங்கள் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு ஒரு குழுப் பாடமாக அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, 10 ஆம் வகுப்பு முதல் நான்கு பள்ளி ஆண்டுகள் தொழிற்கல்வி பாடத்தைப் படித்த பிறகு மாணவர்கள் NVQ 4 சான்றிதழைப் பெற முடியும்.

    இந்த நோக்கத்திற்காக பாடத்திட்டம் மற்றும் தொகுதிகளை உருவாக்கும் பணிகள் தற்போது தேசிய கல்வி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தற்போது உயர்தர தொழிற்கல்வி பாடங்கள் கற்பிக்கப்படும் 609 பள்ளிகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

    பள்ளிக் கல்விக்குப் பிறகு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் அந்தப் பிரிவு தொடர்பாக அந்தத் துறையுடன் தொடர்புடைய அனைத்து கூட்டாளர்களுடனும் கூட்டங்களை நடத்தி, ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையான வரைவு சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

    தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறைக்கான ஆசிரியர் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, அந்தத் திட்டத்தின் கீழ், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடங்களைக் கற்பிக்க புதிய ஆசிரியர்களை நியமித்து, ஆசிரியர் கல்லூரிகள் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை கற்பிப்பதற்காக ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தொழில்துறை துறையின் உதவியுடன் பல்வேறு தொழிற்கல்வி துறைகளில் சமகால போக்குகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆண்டுதோறும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதே பாடத் துறையில் தற்போதைய போக்குகளுக்கு ஏற்ப தொழிற்கல்வி பாடப் பிரிவு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்குள் பாடத் தொகுதிகளில் தேவையான மாற்றங்களைச் சேர்ப்பதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    ஊடக அலகு.

    Upendra Lakmali

    2025-07-09
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி
  • 2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப்பட்டன.

    Tamil Paper Download

    Upendra Lakmali

    2025-07-03
    கல்வி, பள்ளி விவகாரங்கள்
    சிறப்பு அறிவிப்புகள்
  • பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – 2025

    பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார அணையாடைகள் வழங்கல் – 2025 நிகழ்ச்சித்திட்டம் பாடசாலைக்கு வருகை தரும் இலங்கைக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு SLS – 1732/2022 தரச் சான்றிதழைப் பெற்றுள்ள 4 விற்பனை நிறுவனங்களூடாக மட்டுமே இந்த வருடம் செயற்படுத்தப்படவுள்ளது.

    மேலே தெரிவிக்கப்பட்ட நிறுவனங்கள் பாடசாலைக்கே வருகை தந்து மாணவிகளுக்கான சுகாதார அணையாடை பக்கற்றுகளை வழங்குவதன் காரணமாக, அந்நிறுவனங்களைத் தவிர வேறெந்த நிறுவனத்திடமிருந்தும் அணையாடைகளைக் கொள்வனவு செய்ய முடியாது.

    ஊடக அலகு.

    Upendra Lakmali

    2025-07-03
    கல்வி
    சிறப்பு அறிவிப்புகள்
  • பகிடிவதையைப் போன்றே பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற சகல துன்புறுத்தல்கள் தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள்

    பகிடிவதையைப் போன்றே பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற சகல துன்புறுத்தல்கள் தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள்

    கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய

    பல்கலைக்கழக அமைப்பில் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் பகிடிவதை, துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையிலுமான வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகள் மற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையிலுமான வன்முறைகளையும் ஒழிப்பதற்கான தேசிய செயணியின் உறுப்பினர்களுக்கும் அமைச்சருக்கும் இடையே இன்று (02) கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

    மாணவர்களிடம் மற்றும் கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்களிடம் பல்கலைக்கழக அமைப்பிலும் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இடம்பெறுகின்ற அனைத்து வகையிலுமான வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குமாக 3 வருட காலத்திற்கென நியமிக்கப்பட்ட இந்த செயலணிக்கு அவசியமான அதிகாரங்களும் அரசு அனுசரணையும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

    இதுபோன்ற துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு தனிப்பட்ட வகையிலும் சமூக ரீதியாகவும் தாக்கம் செலுத்தும் காரணங்கள் இருப்பதாக செயலணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் கல்வி நிர்வாகம், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே முறையான தொடர்புகள் உருவாக்கப்படாமை, மாணவர்களிடையே பகிடிவதை தொடர்பில் நிலவும் தவறான மனப்பாங்கு, கீழ்ப்படிய வைத்தல் மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக துன்புறுத்துதலைக் கையாளுதல் உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் இதன்போது பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினர். பல்கலைக்கழக அமைப்பில் மாணவர்களுக்கு புள்ளிகள் வழங்கும் போதும் வகுப்புத் தேர்ச்சி வழங்கும்போது நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்கள் மீது செலுத்தும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கின்றமை போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

    அனைத்து வகையிலுமான துன்புறுத்தல்களை நிறுத்துவதற்கு அவசியமான குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதற்குத் தேவையான வழிமுறைகள் மற்றும் பொறிமுறைகளை உருவாக்குமாறும், சட்டரீதியான செயற்பாடுகளால் மாத்திரம் இதனை முடிவுக்குக் கொண்டுவர முடியாதென்பதால் நிலவும் சட்டங்களை இற்றைப்படுத்துவதோடு மனப்பாங்கு விருத்திச் செயற்பாடுகள் போன்றவற்றையும் ஒழுங்கமைக்க வேண்டுமெனவும் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.

    பல்வேறு வகையிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் மாணவர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன இதன்போது தெரிவித்தார்.

    ஊடக அலகு.

    Upendra Lakmali

    2025-07-02
    கல்வி
    செய்தி
1 2 3 4
Next Page

கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல

+(94) 11- 278 5141 / 142 / 143 / 144

+(94) 11- 278 5162

info@moe.gov.lk

தள வழிசெலுத்தல்
  • அமைச்சகம் பற்றி
  • பயிற்சி வாய்ப்பு
  • சுற்றறிக்கைகள்
  • கல்வி சேவைகள்
  • கொள்கைகள் மற்றும் வெளியீடுகள்
  • கொள்முதல் அறிவிப்புகள்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • தள வரைபடம்
ஊடக மையம்
  • செய்தி
  • சிறப்பு அறிவிப்புகள்
  • செய்திக்குறிப்பு
  • நிகழ்வுகள்
  • புகைப்பட தொகுப்பு
  • வீடியோ தொகுப்பு

பதிப்புரிமை © 2024 – கல்வி அமைச்சு | அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன

வடிவமைத்து உருவாக்கியது:
வெப்காம்ஸ் குளோபல் (பிவிடி) லிமிடெட்.

விதிமுறைகள் மற்றும் சேவைகள்