‘பாடசாலைகளில் பேண்ட் வாத்திய இசைக்குழு நிகழ்கள், ஊர்வலங்கள் ஆகிய நிகழ்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்துங்கள்’…
Wednesday, 17 February 2021
தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைக்கு பொறுப்புடன் முகம் கொடுத்தவாறு மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், பிள்ளைகளினது கல்வியில் தரமான விருத்தியை ஏற்படுத்துவதற்குரியதான விடயதானங்களுக்கு இணையான மற்றும் விடயதானம் சாராத நடவடிக்கைகள் தவிர்ந்த பேண்ட் வாத்திய இசைக்குழு நிகழ்வுகள், ஊர்வலங்கள் ஆகியவற்றினை இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் அனைத்து மாகாண, வலய, கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கும் பிரிவெனாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
“கொவிட் தடுப்புசி செலுத்தும் போது ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென அரசாங்கத்திடம் வேண்டுகின்றேன்” – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள்
Wednesday, 17 February 2021
தற்போது மேல்மாகாணத்தின் பாடசாலைகள் எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக ஏனைய வகுப்புகளையும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக மேல் மாகாணத்தின் ஒவ்வொரு பாடசாலையாக ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். ஒவ்வொரு பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற விதம், இணையவழிக் கல்விச் செயற்பாடுகளின் முன்னேற்றம், சுகாதார ஆலோசனைகளின் மேம்பாடு தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விபரங்களை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
‘நிகழும் அவதானமிக்கதும் ஆபத்தானதுமான சூழலில் பாடசாலைகளில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்துவதனைத் தவிருங்கள்’ – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல்
Wednesday, 17 February 2021
கொவிட் 19 தொற்றுநோய் நிலைமையின் கீழ் நிலவும் அவதானமிக்க நிலைமை மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற் கொள்ளாது சில பாடசாலைகளில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்துதல் மற்றும் அதற்கு இணையான ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தற்போது உருவாகியுள்ள சூழ்நிலையில் பிள்ளைகள் உட்பட ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்தினது சுகாதார பாதுகாப்பு பற்றியதான கூடுதல் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டிய காலப்பகுதி எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார். அதன்படி பாடசாலைகளில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
(பாடசாலைச்சீருடைபரிசுப்படிவங்களின் செல்லுபடியாகும்காலம்நீடிக்கப்பட்டுள்ளது (2020 ஆம்ஆண்டுமுதலாம்தரமாணவர்களுக்குஉரியதாக)
Monday, 25 January 2021
2020 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடை பரிசுப் படிவங்களின் செல்லுபடியாகும் காலம் 2021-02-28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய கொவிட் சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை, நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை போன்ற காரணங்களால் மாணவர்களது பரிசுப் படிவங்களுக்குரிய சீருடைகளை கொள்வனவு செய்துகொள்ள முடியாமல் போயுள்ளது எனக் கிடைத்த தகவலை கவனத்திற் கொண்டு கல்வி அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“2020-தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2021-தரம் 6 க்காக கிடைக்கப்பெற்றுள்ள பாடசாலை“
Friday, 15 January 2021
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தர்ஸ்டன் கல்லூரி முழுமையான மறுசீரமைப்பின் பின்னர் பிரதமரால் திறந்து வைப்பு
Wednesday, 13 January 2021
தனது 71 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தர்ஸ்டன் கல்லூரியின் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அப்பாடசாலையின் பழைய மாணவராகிய இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களது கரங்களால் மாணவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு 2021/01/11 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நாட்டின் பிரதான தேசிய பாடசாலைகளுள் ஒன்றாக விளங்கும் தர்ஸ்டன் கல்லூரி 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த ஈ ஏ
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தர்ஸ்டன் கல்லூரி முழுமையான மறுசீரமைப்பின் பின்னர் பிரதமரால் திறந்து வைப்பு
Wednesday, 13 January 2021
தனது 71 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தர்ஸ்டன் கல்லூரியின் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அப்பாடசாலையின் பழைய மாணவராகிய இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களது கரங்களால் மாணவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு 2021/01/11 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நாட்டின் பிரதான தேசிய பாடசாலைகளுள் ஒன்றாக விளங்கும் தர்ஸ்டன் கல்லூரி 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த ஈ ஏ
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“பிள்ளைகளை சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அழைத்து வருவதற்காக அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் …”
Monday, 11 January 2021
கல்வி அமைச்சின் செயலாளர் புதிய பாடசாலை தவணைக்காக பிள்ளைகளை சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அழைத்து வர பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சகல தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்தார். பாடசாலைகளை திறப்பது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே கல்வி அமைச்சின் செயலாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டில் புதிய
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மேல் மாகாணப் பாடசாலைகளின் தரம் 11 வகுப்புகளுக்கு மாத்திரம் ஜனவரி 25 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பமாகும்.
Thursday, 07 January 2021
கோவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகளைத் தவிர, மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் தரம் 11 வகுப்புகள் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்தையும் உள்ளடக்கியதாக பாடசாலைகளை ஜனவரி 11 முதல் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சானது சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கூடியளவு விரைவாக பாடசாலைகளை திறக்க வேண்டும் – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
Monday, 28 December 2020
கூடியளவு விரைவாக சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் தற்போதைய அரசாங்கம் திடமான உறுதியுடன் இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2020.12.20 ஆம் திகதி பன்னிபிட்டிய ஸ்ரீ தர்மவிஜயாலோக விகாரையின் சியாமோபாலி வங்ஸ மகா பீடத்தின் கோட்டை ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரோ அவர்களை சந்தித்ததன் பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலைகளை மீள
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்