அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தவணைக்காக நாளைய தினம் (2021.04.07) முதல் விடுமுறை வழங்கப்படும் என சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை
Wednesday, 07 April 2021
அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தவணைக்காக நாளைய தினம் (2021.04.07) முதல் விடுமுறை வழங்கப்படும் என சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை. பாடசாலைத் தவணைக் குறிப்பு 2021 (36/2020 இலக்க) சுற்றுநிருபத்தின் படி முதலாம் தவணைக்காக சகல அரசாங்க பாடசாலைகளிலும் (சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்) விடுமுறை வழங்கப்படவிருப்பது 2021.04.09 ஆம் திகதியாகும். மேலும் மேற்படி சுற்றுநிருபத்தின் படி அரசாங்க சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக 2021.04.19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன் முஸ்லிம்
- Published in Ministry News, மாணவர்கள் செய்திகள்
No Comments
“மார்ச் மாதம் 29 ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படும்”
Wednesday, 24 March 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இம்மாதம் 29 ஆம் திகதி அதாவது 2021/03/29 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டின் சகல பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் எனவும் அதேநேரத்தில் சகல முன்பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/03/24 ஆம் திகதி பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
நாடுதழுவிய ஆங்கில திறன் வகுப்பு வேலைத்திட்டத்தில் காலி மாவட்ட ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்
Tuesday, 23 March 2021
பாடசாலை மாணவர்களது ஆங்கில அறிவுத் திறனை அதிகரிக்கும் குறிக்கோளுடன் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக உருவாக்கப்பட்ட ஆங்கில திறன் வகுப்பு கருத்திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் காலி மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில் பெரேரா, கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக்க விக்கிரமாதர, பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் (கிழக்கு) செந்தில்
நாட்டின் எதிர்பார்ப்புகளை அடைந்து கொள்வதற்கு அரச மற்றும் தனியார் துறையினர் இணைந்து செயற்படுவது அவசியமாகும்
Tuesday, 16 March 2021
எமது நாட்டின் எதிர்கால இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடைந்து கொள்வதற்கு தனியார் துறை மற்றும் அரச துறையின் ஒன்றிணைவு மற்றும் ஒத்துழைப்பு இன்றியமையாத விடயம் உள்ளதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, பிரண்டிக்ஸ் நிறுவனத்தால் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்கென ரூபா 6.8 மில்லியன் பெறுமதியுடைய1.5 மில்லியன் முகக் கவங்களை கையளிக்கும் நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
மார்ச் 15ஆம் திகதி மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தரம் 05, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கு மாத்திரமே… – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
Friday, 12 March 2021
மார்ச் 15ஆம் திகதி திங்கட்கிழமை மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தரம் 05, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கு மாத்திரமே என்பதுடன் ஏனைய வகுப்புகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது ஏப்ரல் விடுமுறையின் பின்னர் ஏப்ரல் 19 ஆம் திகதியாகும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கல்வி அமைச்சில் 2021.03.09 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
நாட்டின் சகல பாடசாலைகளையும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தயார். மேல் மாகாணத்தில் சுகாதார பரிந்துரைகளின் பின்னரே ஆரம்பிக்கப்படும்.
Tuesday, 09 March 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிள்ளைகளின் வாழ்க்கையில் மிகப் பொறுமதியான காலத்தினை வீணடிக்காமல் தமது செயற்பாடுகளை முன்னகர்த்தி செல்வதற்கு அவசியமான வசதிகள் மற்றும் கல்விச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சானது அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், எனவே இதற்காகவே 2021/03/15 ஆம் திகதி அதாவது எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டின் சகல பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் சுகாதார பரிந்துரைகளின் பின்னர் மேல்மாகாணத்தின் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021.03.08
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“காலதாமதமின்றி பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்யக் கூடிய கட்டமைப்பொன்றினை உருவாக்குவதே எமது நோக்கம்” – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
Wednesday, 03 March 2021
காலதாமதமின்றி பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்யக் கூடிய கட்டமைப்பொன்றினை உருவாக்குவது கல்வி அமைச்சின் பிரதான பணியெனக் கருதி செயற்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பரீட்சை நிலையங்களின் தயார் நிலை தொடர்பில் ஆராயும் பொருட்டு குருநாகல் மலியதேவ மாதிரி கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாளை (01) முதல் ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“பிள்ளைகள் மத்தியில் குழு மனப்பாங்கு, ஒத்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றை உருவாக்குவதில் சாரணர் இயக்கம் மேற்கொள்ளும் பணி தன்னிகரற்றது”-
Tuesday, 02 March 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிள்ளைகளது கருத்துக்களில் நெகிழ்வு மனப்பாங்கு ஏற்படுவது குழந்தைப் பருவத்தில் ஆகும், வாழ்க்கையில் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய அடித்தளத்தினை உருவாக்கி அந்த நற்பண்புகளை மேம்படுத்துவதற்கும், பிள்ளைகள் மத்தியில் கூட்டு மனப்பாங்கு, ஒத்துணர்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உருவாக்குவதற்கும் சாரணர் இயக்கமானது பெரும் பணியாற்றுகின்றது என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். இலங்கையில் குருளைச் சாரணர் மாணவர்களை மேலும் முன்னேற்றும் குறிக்கோளுடன் “தேசத்தின் சகல பிள்ளைகளையும் குருளைச் சாரணராக்குவோம்”
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சாதாரண தரப் பரீடசையை நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்”
Monday, 01 March 2021
“மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சாதாரண தரப் பரீடசையை நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்” கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி (01) திங்கட்கிழமை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுவதாகவும், இம்முறை ஒன்பது நாட்கள் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், பரீட்சைக்கென ஆறு இலட்சத்து இருபத்திஇரண்டாயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளனர் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் நிலவுகின்ற சூழ்நிலையில் பரீட்சையை நடாத்துவது தொடர்பிலான
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2018 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. (உ.தர) பெறுபெறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிலுனர்களை ஆட்சேர்த்தல் – 2020
Friday, 19 February 2021
2018 க.பொ.த (உ.தர) பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியற் கல்லூhpகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரா;களுக்குஇ சிங்களம்ஃ தமிழ்மொழிமூலம் வழங்கப்பட்டுள்ள அறிவூரைகளை நன்றாக வாசித்து வெட்டுப்புள்ளியினுள் நுழையூங்கள். Click Here for Download the Instructions Z Scores for the Sinhala Medium subjects Z Scores for the Tamil medium subjects Z scores for the English medium subjects Z Scores for the Primary Sinhala Medium Z Scores for the