விசேட ஊடக அறிவித்தல்
Friday, 09 February 2024
2022 (2023) க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் பங்கேற்ற பரீட்சகர்களுக்கு ரூ. 1,450.00 இலிருந்து ரூ. 2,000.00 வரையில் அதிகரித்து வழங்கப்பட்ட இணைந்த கொடுப்பனவை 2023 (2024) க.பொ.த (உயர்தர) பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. மேலும் மதிப்பீட்டுப் பணிகளில் பங்கேற்கும் தலைமைக் கட்டுப்பாட்டுப் பரீட்சகர்கள், இணைக் கட்டுப்பாட்டுப் பரீட்சகர்கள், தலைமைப் பரீட்சகர்கள் மற்றும் மேலதிக தலைமைப் பரீட்சகர்களின் ஒட்டுமொத்தப் பணிகளுக்காகவும் 2022 (2023) க.பொ.த. (உயர்தர)
- Published in 690, 697, Ministry News, செய்தி
No Comments
அதிபர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அமைச்சின் குழு அறிக்கை வெளியிடப்பட்டது
Monday, 29 January 2024
அதிபர் சேவையில் இதுவரையில் தீர்க்கப்படாது நிலவிவந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மேற்படி சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்தி கல்விச் சீர்திருத்தங்களுக்கு பொருந்தும் வகையில் அபிவிருத்திச் செய்வதற்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் மிக முக்கியமான ஆறு விடயங்களூடாக பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்குரியதான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையினை அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக மேம்படுத்துதல், அதிபர் சேவைக்கான தேசியக் கொள்கையைத் தயாரித்தல், சேவைப் பிரமாணங்களைத் திருத்தியமைத்து
- Published in 690, 697, Ministry News, செய்தி
ஊடக அறிவித்தல்
Friday, 26 January 2024
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் பிரகாரம் விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வைக்க வேண்டும் என்பதுடன் அதிபர்களினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் இடம்பெறும். பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரமே மேற்கொள்ளப்படும். 2024 ஆம் ஆண்டில் தரம் 1, 5 மற்றும் தரம் 6 ஆகியவற்றைத் தவிர ஏனைய இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த.
- Published in 690, 697, Ministry News, செய்தி
பாடசாலை வகுப்பறையில் தங்கியிருக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பரீட்சைக்கான புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது.
Friday, 13 October 2023
பெற்றோர்கள் தாங்கமுடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு தமது பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதாயின் பாடசாலைகள் இருப்பதில் எந்த பயனும் இல்லை -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புதிய கல்வித்திட்ட மறுசீரமைப்புச் செயல்பாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையினைப் போன்று நான்கு மற்றும் ஐந்து ஆகிய இரு தரங்களில் வகுப்பறையில் தங்கியிருந்து பெற வேண்டிய நிச்சியமான புள்ளிகளின் அளவொன்று இருப்பதால்இ எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருப்பது அவசியமானதாகும் என்பதுடன் சகல தரங்களுக்கும் இவ்விடயம் ஏற்புடையது எனவும் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி
- Published in 690, 691, 695, 697, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Annual Transfer Procedure of the Sri Lanka Teacher Educators’ Service – 2024
Tuesday, 15 August 2023
Annual Transfer Procedure of the Sri Lanka Teacher Educators’ Service – 2024
- Published in Ministry News
அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குதல் – 2024 ஆலோசனைக் கோவை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது
Tuesday, 15 August 2023
2024 ஆம் வருடத்திற்குரியதாக அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான ஆலோசனைக் கோவை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்ப படிவத்திற்கமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை உரிய சகல ஆவணங்களுடன் தமக்குரியதான பாடசாலைகளின் பிரதானிகளுக்கு 2023 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கக் கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். சகல தகைமைகளையும் 2023 ஜூன் மாதம் 30 திகதியின் போது நிறைவு செய்திருத்தல் வேண்டும். உரிய ஆலோசனைகள்
- Published in Ministry News
எதிர்காலத்தில் உயர்தர வணிகப் பிரிவு மாணவர்கள் வங்கிகளுக்கு சென்று வணிக பாடம் தொடர்பிலான கோட்பாட்டு அறிவினை நடைமுறை ரீதியில் பங்கேற்புடனான கண்காணிப்பிற்கு உட்படுத்துதல் வேண்டுமென கல்வி அமைச்சர் முன்மொழிவு.
Thursday, 15 June 2023
– உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையை நடாத்துதல் என ஒரே சந்தர்ப்பத்தில் பணிகளை மேற்கொள்ளும் சவாலுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெற்றிகரமாக முகம்கொடுத்துள்ளது. -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கம் செலுத்தும் வணிக மற்றும் வர்த்தக பாடங்களைக் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் குறித்த அந்த பாடங்கள் பற்றிய தத்துவார்த்த அறிவினையும் நடைமுறை ரீதியில் பயன்பாட்டில் கொண்டிருக்கும் வங்கிகள் போன்ற நிறுவனங்களுக்கு சென்று கோட்பாட்டு விடய அறிவின்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் முடிவுறுத்தல், முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பித்தல்
Tuesday, 06 June 2023
2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் 2023.05.26 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகின்ற அதேவேளை, முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் 2023.06.12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். 2022 – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2023.05.29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2023.06.08 ஆம் திகதி வரையில் நடைபெறும்.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2024 ஆம் ஆண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு பாடத்தினை தரம் 6 தொடக்கம் 9 வரையிலும் 10 தொடக்கம் 13 வரையிலும் நாட்டின் சகல பாடசாலைகளிலும் கற்பிப்பதற்கு நடவடிக்கை.
Tuesday, 06 June 2023
முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் 20 பாடசாலைகளை மையப்படுத்தி ஜுன் 20 ஆம் திகதி ஆரம்பம் சர்வதேச கல்வி மட்டத்திற்கு இணையாக இந்நாட்டின் கல்வித் துறையையும் கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களை 2024 ஆம் ஆண்டிலிருந்து 6 – 9 மற்றும் 10 – 13 வரையான தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் முன்னோடிக் கருத்திட்டம் ஜுன் மாத இறுதியில் தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
விசேட அறிவித்தல்
Wednesday, 31 May 2023
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் எந்தவொரு பாடசாலைக்கும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியினுள் வெளித்தரப்பினர் உள்நுழைவது தடையென்பதுடன், பரீட்சைக்குரிய ஆவணங்களைத் தவிர வேறெந்தவொரு ஆவணத்தையும்/ பத்திரத்தையும் மாணவர்களிடத்தில் பகிர்ந்தளித்தல் செய்யப்படலாகாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அவர்கள் அறிவித்துள்ளார்.