• இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சரை சந்தித்தார்.

    இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சரை சந்தித்தார்.

    இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon Lee) மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனெவிரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று ஜூன் 24 ஆம் திகதி இசுருபாய, கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்காக பிரதி அமைச்சரால் தூதுவர் வரவேற்கப்பட்டதுடன், இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது

    நாட்டின் உழைக்கும் படையணிக்குப் பொருந்தக்கூடிய வகையில் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துதல், இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தொழில்நுட்பக் கல்விக்காக மேற்கொள்ளப்படும் பரிமாற்றுத் திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் குறித்து இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பினுள் கொரிய மொழியைக் கற்பதற்கான சந்தர்ப்பங்களை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் கொரிய கலாச்சார நிலையமொன்றினை நிறுவுதல் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

    ஊடக அலகு

    Upendra Lakmali

    2025-06-27
    கல்வி
    செய்தி
  • தொழிற்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக “க்ளீன் ஸ்ரீ லங்கா” உடன் இணைந்ததான செயற்பாடு..!

    தொழிற்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக “க்ளீன் ஸ்ரீ லங்கா” உடன் இணைந்ததான செயற்பாடு..!

    கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற தொழிற்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான கற்றல் சூழலை உருவாக்குவதற்காக “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் “உழைப்புச் செயற்பாட்டுத்” திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன், தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் 311 தொழில் பயிற்சி நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் ஜூலை 4 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

    தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே அவர்களின் தலைமையில் இன்று (17) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300,000 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற அதேவேளை, அதில் சுமார் 240,000 மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்கின்றனர். இந்த மாணவர்களுள் சுமார் 125,000 பேர் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நுழைகின்ற அத​வேளை சுமார் 50,000 மாணவர்கள் வேறு இணைந்த உயர்கல்வி நிறுவனங்களை அனுகுகின்றனர்.

    அதன்படி, ஆண்டுதோறும் பல்கலைக்கழக அனுமதியை இழக்கும் சுமார் 175,000 மாணவர்களை தொழிற்கல்வியைத் தொடர்வதற்காக ஊக்குவிப்பதற்கும், அவர்களின் கல்விக்கேற்ற சூழல் மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா செயலகமும் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.

    இந்தத் செயற்றிட்டத்திற்காக தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி கற்கும் 125,000 மாணவர்கள், சுமார் 10,000 கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட சுமார் 160,000 பேர் இணைந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இக்கலந்துரையாடலில் கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு, ஜனாதிபதி மேலதிக செயலாளர் எஸ்.பி.சீ. சுகீஸ்வர ஆகியோர் உட்பட, கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் உத்தியோகத்தர்களும், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

    Upendra Lakmali

    2025-06-23
    கல்வி
    செய்தி
  • புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வை செய்து ஒழுங்குறுத்துக.
    கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.

    புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வை செய்து ஒழுங்குறுத்துக.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.

    தேசிய கல்வி ஆணைக்குழுவின் புதிய உத்தியோகத்தர்கள் சபைக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் தேசிய கல்வி ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

    இதன்போது புதிய உத்தியோகத்தர்கள் சபை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய கல்விச் சீர்த்திருத்தத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் பற்றியும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

    2026 முதல் புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை தொடங்குவதற்குத் தயார் என்றும், அதற்காக கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் கூட்டிணைந்து சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளும்போது தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இருக்கும் பொறுப்பு பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், ஆணைக்குழுவில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்தும், எதிர்காலத்தில் செய்யவேண்டிய செயற்றிட்டம் குறித்தும் இதன்போது அமைச்சர் விடயங்களை தெளிவுப்படுத்தினார்.

    புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை முன்னெடுக்கும்போது பாடசாலைகள் பற்றிய மதிப்பாய்வினை மேற்கொள்ளல் மற்றும் ஒழுங்குறுத்தல் பணிகள் தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், கல்விக் கொள்கையை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

    கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ.சரத் ஆனந்த, உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோரை உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.


    Upendra Lakmali

    2025-06-20
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி
  • ஸ்ரீலங்கா ஆசிரியர் கல்வி சேவையின் வருடாந்திர இடமாற்றம் – 2025

    Notice – SinhalaDownload
    Tansfer List – SinhalaDownload
    Notice – TamilDownload
    Transfer List – TamilDownload

    Upendra Lakmali

    2025-06-20
    கல்வி
    சிறப்பு அறிவிப்புகள்
  • தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாகியுள்ள அதிபர் பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை தெரிவு செய்வு செய்து நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைத்தல்- இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் II/III

    NoticeDownload
    Date and Time ListDownload
    Calling LetterDownload

    Upendra Lakmali

    2025-06-20
    கல்வி
    சிறப்பு அறிவிப்புகள்
  • மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் உலகை வெல்லவும் அறிவியலையும் அறிவியலின் முன்னேற்றத்தையும் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
    – வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்

    மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் உலகை வெல்லவும் அறிவியலையும் அறிவியலின் முன்னேற்றத்தையும் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.– வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்

    கல்வி அமைச்சினால் வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படும் தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் மாகாண மற்றும் தேசிய மட்ட விருது வழங்கும் விழா இன்று (20) கல்வி அமைச்சில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனெவிரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

    தேசிய ஒலிம்பியாட் போட்டித்தொடரானது அறிவியல், கணிதம், தகவலியல் மற்றும் புள்ளிவிபரவியல் ஆகிய பாடங்களை மையமாகக் கொண்டு பல பிரிவுகளூடாக நடாத்தப்படுகிறது. இந்தப் பாடங்களில் திறமைகளையுடைய மாணவர்களை அடையாளம் காணல், ஊக்குவித்தல் மற்றும் பாடவிதானம் சார்ந்த விழிப்புணர்வை அதிகரித்தல் அத்துடன் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் பங்கேற்கும் தேசிய அணியைத் தெரிவுசெய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுகிறது.

    2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் மாகாண மற்றும் அகில இலங்கைப் போட்டிகளில் வெற்றியீட்டிய 101 மாணவர்களுக்கு திறமைச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கல் இதன்போது இடம்பெற்றது.

    இங்கு உரையாற்றிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனெவிரத்ன அவர்கள், இத்துடன் உங்களது பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல் உலகை எவ்வாறு வெல்வது என்பதனைத் திட்டமிடுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விருதுகளை வென்ற மாணவர்கள், அறிவியல் ஒலிம்பியாட் சர்வதேச போட்டித்தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

      

    Upendra Lakmali

    2025-06-20
    கல்வி, கல்வி தர மேம்பாடு
    செய்தி
  • சிறந்த ஒரு பிரஜை என்பதன் பொருள் வெறுமனே சிறந்தவொரு தொழிலைச் செய்வது மட்டுமல்ல, மாறாக மற்றையவர்களின் சிரமங்களையும் பெண்களின் விடயங்கள் தொடர்பிலும் கூறுணர்வுமிக்க ஒரு பிரஜையாக சமூகத்தில் வாழப் புரிந்துகொள்வதற்கான பிரஜையாகவும் இருப்பதாகும்.

    சிறந்த ஒரு பிரஜை என்பதன் பொருள் வெறுமனே சிறந்தவொரு தொழிலைச் செய்வது மட்டுமல்ல, மாறாக மற்றையவர்களின் சிரமங்களையும் பெண்களின் விடயங்கள் தொடர்பிலும் கூறுணர்வுமிக்க ஒரு பிரஜையாக சமூகத்தில் வாழப் புரிந்துகொள்வதற்கான பிரஜையாகவும் இருப்பதாகும்.

    யௌவனப் பருவத்தினரின் சுகாதாரம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (17) கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

    இதன்போது யௌவனப் பருவத்தினரின் சுகாதாரம் குறித்த விசேட சொற்பொழிவை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக விசேடவைத்திய நிபுணர் அசாந்தி பெர்னாண்டோ பலபிட்டிய நிகழ்த்தினார்.

    மேலும் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

    சுகாதாரம் என்பது கல்வியுடன் நேரடியாக தொடர்புடையது என்று நாங்கள் நம்புகிறோம். கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இடையில் என்ன தொடர்பு உள்ளதென்று சிலர் சிந்திக்கலாம்.
    சுகாதாரம் என்பது அனைவருக்கும் உள்ள உரிமை, அனைவருக்கும் அவசியமான ஒன்று என்பதுடன் சரியான சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால், குறிப்பாக வசதிகள் குறைந்த பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகள் மாதத்திற்கு ஒரு தடவையாவது கல்வியைப் பெறுவதைத் தவறவிடுகிறார்கள் என்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேநேரத்தில் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடும் அவர்களுக்கான உரிமையையும் கட்டுப்படுத்தப்படுகிறது. சரியான சுகாதார வசதிகள் இல்லாமையே அதற்கான காரணமாகும்.

    மாணவிகளாகிய நீங்கள் மாத்திரமல்ல நாம் அனைவரும் இந்த அனுபவத்தை தேவைக்கு அதிகமாகவே அனுபவித்திருக்கிறோம். பாடசாலைக்குள் மாத்திரமல்ல. பொது வசதிகள் மிகவும் குறைவாக உள்ள காரணத்தினால் சமூகத்திலுள்ள ஒட்டுமொத்த பெண்களும் இந்த சிரமத்திற்கு முகம்கொடுக்கின்றனர்.

    சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் கேட்கலாம், ஆண்களாகிய நாங்கள் இங்கு எதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது பெண்களின் பிரச்சினை அல்லவா, அவர்களே அதைத் தீர்த்துக்கொண்டால் பிரச்சினை முடிந்துவிட்டது தானே என்றும். ஆனால் உங்களுக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றது. அதேவேளை, பெண்கள் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால், ஆண்கள் அதைப் பற்றி உணர்திறன் உடையவர்களாக இருப்பதற்கு புரிதலும் பச்சாதாபமும் கொண்டிருக்க வேண்டும்.

    வெற்றிகரமான ஒரு பிரஜை என்பதன் அர்த்தம் சிறந்த ஒரு தொழிலைச் செய்வது மட்டுமல்ல. சமூகத்தில் எவரேனும் அசௌகரியத்துடன் இருந்தால், அதை நீங்கள் உணரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பெண்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளின் போது உங்களுக்கு பச்சாதாபம் இருக்க வேண்டும். மேலும், அப்படிப்பட்ட ஒரு குடிமகனாக சமூகத்தில் வாழ்வதற்கான புரிதல் உங்களிடத்தில் இருந்தால் மட்டுமே நீங்கள் பெற்றிகரமான ஒரு பிரஜை.

    இங்கிருந்து ஆரம்பித்து பாடசாலை மட்டத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்துகிறோம். கல்வி என்பது பெரிய ஒரு தலைப்பு. இந்த சமூகத்திற்கு, இந்த சமுதாயத்திற்கு முக்கியமான தலைமைத்துவத்தை வழங்கவும் வழிநடத்தக்கூடிய மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரையும் குணப்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறையை உருவாக்குதலும் கல்வியினூடாக இடம்பெறுதல் வேண்டும். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதும், ஒருவருக்கொருவருடன் எவ்வாறு நடந்துகொள்வதும் உள்ளிட்ட அனைத்தும் கல்வியில் இருக்க வேண்டும்.

    எனவே, சுகாதாரம் என்பது ஆரோக்கியத்திற்கு மட்டும் வரையறுக்கப்படக்கூடிய ஒன்றல்ல. சுகாதாரம் என்பது மாதவிடாய் சுழற்சியைப் பற்றி மட்டும் பேசுவது அல்ல. பாடசாலைக்குள்ளும், பொது​ சமூகத்திலும் சுகாதார வசதிகளுக்கான ஆகக் குறைந்த வசதிகள் கிடைப்பதை அரசாங்கம் ஒரு அடிப்படை உரிமையாகக் கருதுகிறது. சுகாதாரம் என்பது மறைக்கப்பட வேண்டிய ஓர் விடயமல்ல.

    எனவே இந்த சமூகமானது ஒருவரையொருவர் மதிக்கும், சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட ஒருவரையொருவர் பாதுகாக்கும், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும், மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் சமூகமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
    இந்த நிகழ்விற்கு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், குடும்ப சுகாதார பணியகம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    ஊடக பிரிவு

    Upendra Lakmali

    2025-06-20
    கல்வி
    செய்தி
  • 2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்விசார் மாற்ற நடவடிக்கைக்குரியதான வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்.

    2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்விசார் மாற்ற நடவடிக்கைக்குரியதான வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்.

    2026 ஆம் ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்விசார் மாற்ற நடவடிக்கைக்குரியதான வழிகாட்டுதல்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மற்றும் அதற்குரியதாக ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜூன் 16 ஆம் திகதி, மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

    2026 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமெனவும், 2028 ஆம் ஆண்டு தரம் 10 இற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனவும், 2029 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை புதிய பாடத்திட்டத்தின்படி நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், மற்றும் தரம் 9 தொடக்கம் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
    இதன்போது, ​​தேசிய கல்வி நிறுவகத்தின் ஒவ்வொரு பிரிவின் தலைவர்களும் இக்கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான செயல்முறையை தங்கள் பிரிவுகள் மூலம் செயற்படுத்தும் விதம் மற்றும் அதன் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சரைத் தெளிவுபடுத்தினர்.

    இது பாடத்திட்டங்களைத் திருத்துதல், ஆசிரியர் பயிற்சி, நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், முறையான மதிப்பீட்டுச் செயன்முறையொன்றினை உருவாக்குதல் மற்றும் இதற்காக பொதுமக்களின் பங்கேற்பு ஆகிய 5 தூண்களை (காரணிகளை) அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கல்விசார் மாற்றம் எனவும், இதன்போது உயர்ந்த மனப்பான்மை கொண்ட ஆசிரியர்களை உருவாக்குவது தேசிய கல்வி நிறுவகங்களின் பொறுப்பு என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும் இச்சீர்திருத்தங்களுடன் மாத்திரம் நின்றுவிடாது இவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் முறையான மதிப்பீட்டுச் செயன்முறையொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    மேற்படி கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ அவர்கள், மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் திருமதி.மஞ்சுளா வித்தானபதிரன மற்றும் அந்நிறுவகத்தின் அனைத்துத் துறைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    Upendra Lakmali

    2025-06-17
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி
  • பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகள் பற்றிய தரநிலைகள் அடங்கிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான முன்மொழிவு…

    பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகள் பற்றிய தரநிலைகள் அடங்கிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான முன்மொழிவு…

    அரசுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான விடுதி வசதிகளை ஆராய நியமிக்கப்பட்ட குழுவுக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

    இதன்போது, ஒன்பது பேர் அடங்கிய இந்தக் குழுவினால் அரசுப் பல்கலைக்கழகங்களுக்குச் சொந்தமான மாணவர் விடுதிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன், அந்த அறிக்கையை கருத்தில் கொண்டு மாணவர் விடுதிகளுக்கு தேவையான வசதிகளை விரைவாக வழங்குவதில் பிரதமர் தனது கவனத்தை செலுத்தினார்.

    தவிர, கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, விடுதி வசதிகள் தொடர்பான தரநிலைகள் அடங்கிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான யோசனை இதன்போது முன்வைக்கப்பட்டது.

    இச்சந்தர்ப்பத்தில், குழுத்தலைவர் பேராசிரியர் திரு. கே.எல். வசந்த குமாரவை உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் இணைந்துக்கொண்டிருந்தனர்.

    ஊடக பிரிவு



    Upendra Lakmali

    2025-06-13
    கல்வி
    செய்தி
  • புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வை செய்து ஒழுங்குறுத்துக.
    கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.

    புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வை செய்து ஒழுங்குறுத்துக.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.

    தேசிய கல்வி ஆணைக்குழுவின் புதிய உத்தியோகத்தர்கள் சபைக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் தேசிய கல்வி ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

    இதன்போது புதிய உத்தியோகத்தர்கள் சபை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய கல்விச் சீர்த்திருத்தத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் பற்றியும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

    2026 முதல் புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை தொடங்குவதற்குத் தயார் என்றும், அதற்காக கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் கூட்டிணைந்து சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளும்போது தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இருக்கும் பொறுப்பு பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், ஆணைக்குழுவில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்தும், எதிர்காலத்தில் செய்யவேண்டிய செயற்றிட்டம் குறித்தும் இதன்போது அமைச்சர் விடயங்களை தெளிவுப்படுத்தினார்.

    புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை முன்னெடுக்கும்போது பாடசாலைகள் பற்றிய மதிப்பாய்வினை மேற்கொள்ளல் மற்றும் ஒழுங்குறுத்தல் பணிகள் தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், கல்விக் கொள்கையை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

    கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ.சரத் ஆனந்த, உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோரை உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.


    Upendra Lakmali

    2025-06-06
    கல்வி
    செய்தி
Previous Page
1 2 3 4
Next Page

கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல

+(94) 11- 278 5141 / 142 / 143 / 144

+(94) 11- 278 5162

info@moe.gov.lk

தள வழிசெலுத்தல்
  • அமைச்சகம் பற்றி
  • பயிற்சி வாய்ப்பு
  • சுற்றறிக்கைகள்
  • கல்வி சேவைகள்
  • கொள்கைகள் மற்றும் வெளியீடுகள்
  • கொள்முதல் அறிவிப்புகள்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • தள வரைபடம்
ஊடக மையம்
  • செய்தி
  • சிறப்பு அறிவிப்புகள்
  • செய்திக்குறிப்பு
  • நிகழ்வுகள்
  • புகைப்பட தொகுப்பு
  • வீடியோ தொகுப்பு

பதிப்புரிமை © 2024 – கல்வி அமைச்சு | அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன

வடிவமைத்து உருவாக்கியது:
வெப்காம்ஸ் குளோபல் (பிவிடி) லிமிடெட்.

விதிமுறைகள் மற்றும் சேவைகள்