சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

“இந்தக் கல்வி முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேறுபாட்டினை மாற்றுவது எமது பிரதான குறிக்கோள்.”

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் புதிய சீர்திருத்தங்களின் பாட தொகுதிகள் (மொடியுள்) தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையே காணப்பட வேண்டிய பரஸ்பர உறவின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் கல்வித் துறையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

“இந்தக் கல்வி முறைமையில் நிலவும் வேறுபாட்டினை மாற்றுவது எமது பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். அதற்கமைய, ஒரு பிள்ளைகள் குழுவினருக்கு மட்டுமல்ல, சகல பிள்ளைகளுக்கும் நமது கல்வி முறைமையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடத்தை அடையக்கூடிய ஒரு கல்வி முறைமையை உருவாக்குவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்களின்போது அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் மிகவும் முக்கியமானவை என்றும், எதிர்காலத்தில் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து மாவட்ட மட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுவது அவசியம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ, கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப் பிரிவு