சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினருக்கு தெளிவூட்டல்

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்களைத் தெளிவூட்டும் வகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஜூலை 30ஆம் திகதி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக இதன்போது பிரதமர் அவர்களினால் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான தெளிவூட்டல் மேற்கொள்ளப்பட்டது.

புதிய கல்விச் சீர்திருத்தத்தினூடாக மேற்கொள்ளப்படும் பாட விதான மறுசீரமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு, மொடியுள் மற்றும் செயற்பாடுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தமது கருத்துக்களை முன்வைத்தது.

இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பில் பிரதமர் தனது கவனத்தைச் செலுத்தியதோடு, புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக முன்வைத்த புதிய கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ உள்ளிட்ட அரச அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஊடக பிரிவு