சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகள் பற்றிய தரநிலைகள் அடங்கிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான முன்மொழிவு…

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


அரசுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான விடுதி வசதிகளை ஆராய நியமிக்கப்பட்ட குழுவுக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, ஒன்பது பேர் அடங்கிய இந்தக் குழுவினால் அரசுப் பல்கலைக்கழகங்களுக்குச் சொந்தமான மாணவர் விடுதிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன், அந்த அறிக்கையை கருத்தில் கொண்டு மாணவர் விடுதிகளுக்கு தேவையான வசதிகளை விரைவாக வழங்குவதில் பிரதமர் தனது கவனத்தை செலுத்தினார்.

தவிர, கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, விடுதி வசதிகள் தொடர்பான தரநிலைகள் அடங்கிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான யோசனை இதன்போது முன்வைக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில், குழுத்தலைவர் பேராசிரியர் திரு. கே.எல். வசந்த குமாரவை உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் இணைந்துக்கொண்டிருந்தனர்.

ஊடக பிரிவு