இணை பாடத்திட்டம் மற்றும் தொடக்கக் கல்வி மேம்பாடு


திருமதி யு டி திக்கும்புர
மேலதிக செயலாளர்
இணை பாடத்திட்டம் மற்றும் தொடக்கக் கல்வி மேம்பாடு

சுயவிவரம்

திருமதி உதாரா ரீ. தம்பபன்னி அவர்கள் கொழும்பு 05 விஷாகா வித்தியாலயத்தில் தமது இரண்டாம் நிலைக் கல்வியை நிறைவு செய்துள்ளார். அவர் ஸ்ரீ ஜயவர்தன் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் பற்றிய விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் கல்வி டிப்ளோமா மற்றும் ஆசிரியர் கல்வி பற்றிய கல்விமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். இதற்கு மேலதிகமாக திருமதி திக்கும்புர அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்டெட்பர்ட்ஷெயர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவம் பற்றிய விஞ்ஞான முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

திருமதி திக்கும்புர அவர்கள் இலங்கை கல்வி நிர்வாகச் சேவைக்கு 2005ஆம் ஆண்டு திறந்த போட்டிப் பரீட்சையினுடாக இணைந்துகொண்டுள்ள அதேவேளை, சுமார் 20 வருடகால அனுபவத்தை கல்வித் துறையில் பெற்றுக்கொண்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் மேலதிக செயலாளர் ( பாடசாலை அலுவல்கள்), மேலதிக செயலாளர் (கொள்கை, திட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு), கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், கல்விப் பணிப்பாளர் (ஐசீரீ) மற்றும் கல்விப் பணிப்பாளர் (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) உள்ளிட்ட பல பிரதான பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

தற்பொழுது அவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்தின் (விசேட தரம்) உத்தியோகத்தர் என்ற வகையில் மேலதிக செயலாளர் (இணைப் பாடவிதான மற்றும் ஆரம்பக் கல்வி அபிவிருத்தி) பதவியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.