சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

தற்போதைய உலகில் எமது மகா சங்கத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விசேட கடமையை மிகச் சிறப்பாக நிறைவேற்றக் கூடியதான கல்வியை பிரிவெனாக் கல்வியில் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


– கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பிரிவெனாக் கல்வியானது நிண்ட வரலாற்றைக் கொண்டது எனவும், வரலாறு மற்றும் சம்பிரதாயங்களைப் பாதுகாத்தவாறு தற்போதைய உலகில் மகா சங்கத்தினர் தமது விசேட கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும், அந்தக் கடமையை முறையாக மேற்கொள்வதற்கு அவசியமான பிரிவெனாக் கல்வியைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

பத்தரமுல்ல, இசுறுபாய கல்வி அமைச்சில் ஜூலை 30ஆம் திகதி இடம்பெற்ற, பிரிவெனாக் கல்விச் சபையினால் அனுமதிக்கப்பட்ட 203ஆவது புதிய பிரிவெனா ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இதன்போது 273 பிரிவெனா ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

“இன்றைய தினம் எமது மகா சங்கத்தினருக்கு பௌத்த சமயத்தின் சார்பில் மாபெரும் கடமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரபுகள் மற்றும் சம்பிரதாய முறைப்படி நாம் மேற்கொண்டுவந்த அந்த பணிகள், அம்மாபெரும் சேவைகளைப் போன்று இன்று நாம் உலகுடன் வெளிப்படையாக இணைந்து கொண்டிருக்கின்றோம். பௌத்த சமயத்தைக் கற்பது, அதன் தத்துவம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பில் முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ளது.

ஆகவே எமது மகாசங்கத்தினர் உலகுடன் தொடர்புகொள்ள வேண்டும். உலகில் தற்பொழுது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளுடன் பௌத்த சமயத்தின் கடமைகள் என்றுமில்லாதவாறு விசேடத்துவம் பெறுகின்றதோடு தேவைப்பாடாகவும் உள்ளது.

இந்த சூழ்நிலையில் நாம் எவ்வகையான ஆசிரியர்களை, எவ்வாறான பிரிவெனாக் கல்வியை உருவாக்க வேண்டுமென்பது தொடர்பாக நன்று சிந்திக்க வேண்டும். அத்துடன், அது எமது வரலாறு மற்றும் சம்பிரதாயங்களைப் பாதுகாக்கும் அதேவேளை இன்றைய உலகிற்கு பொருந்தும் வகையில் அதனை மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் கடமைக்கும் நாம் தயாராக வேண்டும்.

மகா சங்கத்தினராகிய உங்கள் அனைவருக்கும் முக்கியமான சவாலொன்று உள்ளது. கற்பித்தல் மாத்திரமன்றி எமது பௌத்த சமயத்தைப் பாதுகாக்கின்ற அந்த மகா சங்கத்தினரை உருவாக்கும் விசேட கடமையே அது. பௌத்த சமயத்தில் கற்பிக்கப்படுகின்ற அந்த தத்துவத்தில் அடங்கியுள்ள நடைமுறைச் சாத்தியம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றை கற்றுக் கொடுப்பது மாத்திரமன்றி அதனை நாம் நடைமுறையில் நிறுபித்துக் காட்டவும் வேண்டும். அதன்போது அறிவு மற்றும் கல்விக்கு அப்பாற்சென்ற ஒரு பொறுப்பு உங்கள் அனைவரிடமும் காணப்பட வேண்டும்.

தற்பொழுது பாரிய பேசுபொருளாக மாறியுள்ள எமது கல்வி முறைமையை மாற்றத்திற்கு உட்படுத்துவதற்கு நாம் தயாராகின்ற இவ்வேளையில் அதனை எந்த வகையில் பிரிவெனாக் கல்வியுடன் ஒன்றிணைப்பது என்பது தொடர்பாக நாம் கலந்துரையாடுவது அவசியம், எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு பிரிவெனாக் கல்விப் பணிப்பாளர், சங்கைகுரிய ராஜகீய பண்டித கலாநிதி கும்பல்கொட தம்மாலோக தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ அவர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

ஊடகப் பிரிவு