சமய விழுமியங்கள் கிளை


திருமதி. எச்.எச்.வி.எம். சஞ்சீவானி
கல்வி இயக்குனர்
சமய விழுமியங்கள் கிளை

கிளையின் பணிகள்

பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், கத்தோலிக்கம், பௌத்த நாகரிகம், சைவநெறி ஆகிய விடயங்களின் அடைவு மட்டங்களை விருத்தி செய்தல் மற்றும் ஆசிரியர்களின் இயலுமை விருத்தி உள்ளிட்ட அனைத்து வளவாளர்களையும் உள்ளடக்கிய துறைகளில் நேரடியாக ஈடுபடுதல் மற்றும் அவர்களை கண்காணித்தல்

கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோரின் தலைமைத்துவத்துடன் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, கத்தோலிக்க சமய ஆலோசனை சபைகளை நிறுவி அந்தந்த மதங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்

“நல்லொழுக்கமுள்ள சிறுவர் தலைமுறையும் சிறந்த சமூகமும்” என்ற கையேட்டை அச்சிட்டு நடைமுறையிலும் கோட்பாட்டு ரீதியிலும் பாடசாலை முறைமையினுள் நடைமுறைப்படுத்தி, அதன் ஊடாக பாடசாலை முறைமையின் பெறுமதிகளுடன் வலுவூட்டப்பட்ட மாணவர் சமூகத்தை உருவாக்கி அவர்களை ஆக்கபூர்வமான, ஒழுக்கமான, நேர்மையான மனிதர்களாக சமூகமயப்படுத்தி அதன் ஊடாக சமூக அழிவைக் குறைத்து பேண்தகு அபிவிருத்திக்கு நேரடியாகப் பங்களிப்புச் செய்தல்.

அனைத்து சமய நிகழ்ச்சித்திட்டங்களையும் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல் நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரித்தல், அவற்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணித்தல்.

ஊழிய வளாகத்தினுள் வருடாந்தம் முக்கியமான சமய நாட்களை அடையாள ரீதியில் நடாத்துவதற்கான நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தலும் நெறிப்படுத்தலும்.