-கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன.
தேசிய கல்விப் பீடங்களில் கல்வி கற்கும் ஆசிரியர் பயிலுனர்களுக்கு அழுத்தமற்ற கற்றல் சூழலை உருவாக்குவதற்கும், கல்வி பீடங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும்மான ஒரு செயல் திட்டத்தைச் செயல்படுத்துவதைப் பற்றித் தனது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன தெரிவித்தார். பத்தரமுல்லை, கல்வி அமைச்சு வளாகத்தில், தேசிய கல்வி பீடங்களின் பீடாதிபதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து கல்வி பீடங்களின் பீடாதிபதிகளும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு கல்விப் பீடத்திற்கும் தத்தமது கல்வி மற்றும் கல்வி சாரா பிரச்சினைகள், உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் பயிலுனர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவதற்காக இதுவரை கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளுக்குத் நமது விசேட கவனத்தை செலுத்துவதாகவும், முக்கியமான பிரச்சினைகள் காணப்படுகின்ற கல்விப் பீடங்களுக்குக் தனது கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு துரித தீர்வுகளைப் பெற்றுத் தர இருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
ஆசிரியர் பயிலுனர்களுக்கு சுதந்திரமான கற்றல் சூழலை உருவாக்குவதும், அவர்களின் மனநல நல்வாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பதும் எதிர்காலத்திற்கான முதலீடாகும். ஏனெனில் எதிர்காலத்தில் அவர்களே பாடசாலை ஆசிரியர்களாக மாணவர்களிடையே செல்லவுள்ளார்கள். அவர்களின் மனநலத்தை மேம்படுத்துவதற்காக ஆலோசனை சேவைகளை வலுப்படுத்த நாம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம், எனத் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் ஆசிரியக் கல்விக்கான பிரதம ஆணையாளர் திருமதி இரோஷினி கே. பரணகம மற்றும் கல்வி அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



