கலாநிதி திருமதி எம். எம். வேஹெல்ல
கலாநிதி திருமதி எம்.எம். வேஹெல்ல அவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகராவார் அவர் பிரதி அதிபராக, உதவி கல்விப் பணிப்பாளராக, தேசிய கல்வி ஆணைக்குழுவின் செயலாளராக மற்றும் கல்விப் பணிப்பாளராக 1988 ஆம் ஆண்டு முதல் சேவையாற்றியிருப்பதுடன், சமகாலத்தில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக (திட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு) பணிபுரிகிறார்
முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பாக 32 வருடத்திற்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட அவர் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களம், அரச பாடசாலைகள் மற்றும் கல்வி அமைச்சு போன்ற நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை ஏற்று பணி புரிந்துள்ளார்
கலாநிதி எம்.எம். வேஹெல்ல அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமானி பட்டதாரி என்பதுடன் ஐக்கிய இராச்சியத்தின் லண்டண் பல்கலைக்கத்தில் கல்வி மற்றும் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான பட்டப்பின் பட்டமும்இ கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி தொடர்பான தத்துவமானி பட்டம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின்; சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் கல்வி தொடர்பான கலாநிதி பட்டமும் பெற்றவர் ஆவார்
எச். யூ. பிரேமதிலக்க அவர்கள்
எச். யூ பிரேமதிலக்க அவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் உத்தியோகத்தர் என்பதுடன் பிரதி அதிபராகவும் அதிபராகவும் 1988 ஆம் ஆண்டு முதல் கடமையாற்றியதுடன், சமகாலத்தில் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராகவும் (கல்வி பண்புத்தர அபிவிருத்தி) பணிபுரிகிறார்
முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பில் 32 வருடத்திற்கும் மேலான அனுபவத்தைக்கொண்ட அவர் மாத்தளை விஜய கல்லூரி, வலல மெனிக்ஹின்ன ஏ ரத்நாயக்க கல்லூரி கொழும்கு நாலந்தா கல்லூரி மற்றும் கல்வி அமைச்சில் பல்வேறு துறைகளில் கடமையாற்றியூள்ளார்
எச். யூ பிரேமதிலக்க அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டதாரி என்பதுடன், அந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் பட்ட கல்வி டிப்ளோமாவும், தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி முகாமைத்துவம் தொடர்பான பட்டப்பின் பட்ட கல்வி டிப்ளோமாவும் உடையவர் ஆவார்
டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார
டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார அவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஆவார். ஆவர் உதவி ஆணையாளராக, பிரதி ஆணையாளராக, ஆணையாளராக மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகமாக 1988 ஆம் ஆண்டு முதல் சேவையாற்றியதோடு சமகாலத்தில் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராக (கல்விச் சேவைகள் தாபனம்) பணிபுரிகின்றார்
முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பில் 32 வருடத்திற்கும் மேலான அனுபவத்தைக்கொண்ட அவர் கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்துள்ளார்
டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிகவியல் விசேட பட்டதாரி என்பதுடன், ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மதிப்பீட்டுத் துறை தொடர்பான பட்டப்பின் பட்டம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி தொடர்பான பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை தனதாக்கி கொண்டுள்ளார்
R.B Gankewala
திரு ஏ. எம். பீ. எம். பி அத்தபத்து
திரு ஏ. எம். பீ. எம். பி அத்தபத்து இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த ஒருவராவார். இவர் உதவிப் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், பணிப்பாளர், பணிப்பாளர் தலைமையதிபதி, திறைசேரியின் பிரதி செயலாளராக 1994 தொடக்கம் கடமையாற்றியுள்ளதுடன் தற்போது கல்வி அமைச்சில் திட்டமிடல் பணிப்பாளர் தலைமையதிபதியாக கடமையாற்றி வருகிறார்.
திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறையில் 25 வருட கால அனுபவத்தை கொண்டுள்ள இவர் திட்டமிடல் திணைக்களம், நிதி அபிவிருத்தி திணைக்களம், வெளிநாட்டு மூலவளத் திணைக்களம் மற்றும் நிதியமைச்சில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
திரு ஏ. எம். பீ. எம். பி அத்தபத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். மேலும், பொது நிர்வாகத் துறையில் பட்டமொன்றையும் பெற்றுள்ள இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பட்டப்பின் படிப்பு டிப்ளேமாமாவையும், ஜப்பானின் அபிவிருத்தி பொருளாதார கல்வி நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம் பற்றிய பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும், ஆஸ்திரேலியாவின் ப்லின்டர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொடர்புகள் பற்றிய பட்டப் பின் படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.
டீ. எல். ஏ. விஜேநாயக்க
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் தொடர்பான பட்டப்பின் பட்ட நிறுவனத்தின் அரச நிர்வாகம் தொடர்பான பட்டப்பின் பட்டமும்,க(e-Government),பேராதனை பல்கலைக்கழக்த்தின் கணக்கியல் மற்றும் நிதி தொடர்பான பட்டப்பின் பட்ட டிப்ளோமாவும், கணக்கியல் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமாவும், தனிநபர் நிதி முகாமைத்துவ டிப்ளோமாவும், தகவல் தொழில்நுட்ப டிப்ளோமாவும், (e-Government), பட்டய கணக்காளர் CompTia A+, (இறுதி) மற்றும் கணக்கியல் நிபுணர்களின் சங்கத்தின் முழு உறுப்பினர் பதவியும் அவரை சார்ந்ததாகும்.
அரச நிதி முகாமைத்துவம், பெறுகை முகாமைத்துவம், திட்ட நிதி, (e-Government), சேவைகள் தொடர்பில் ஆர்வம் காட்டுவதோடு, ஐக்கிய இராச்சியம், மலேசியா,தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் அனுபவத்தினை கொண்டவராவார்.