கல்வி அமைச்சில் நிலவும் கல்விப் பணிப்பாளர் / ஆணையாளர் தொடர்பான 16 பதவிகளுக்கு கல்வி நிர்வாக சேவையின் தரம் 1 இற்கான புதிய நியமனங்கள் …
புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022
மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களில் வெற்றிடமாக உள்ள 16 கல்விப் பணிப்பாளர் / ஆணையாளர் பதவிகளுக்காக இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1இன் அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி புதிய நியமனங்களுக்குரியதான நியமனக் கடிதங்கள் கல்வி அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண அவர்களின் தலைமையில் உரிய முதலாம் தர உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது. மேலதிக செயலாளர் எம். என். ஜே. புஷ்பகுமார அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் 25.04.2022 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.
No Comments
தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒன்றிணைந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்
வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2022
தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) முற்பகல் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.தாதியர் கல்வியில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டமொன்றை வழங்குவது காலத்துக்கு பொருந்தும் செயற்பாடு
இலங்கை சோசலிச இயக்கத்தின் ஸ்தாபகர், தேசிய மாவீரர் பிலிப் குணவர்தன அவர்களின் 50வது நினைவு தினம்…
வியாழக்கிழமை, 31 மார்ச் 2022
இலங்கை சோசலிச இயக்கத்தின் ஸ்தாபகர், தேசிய மாவீரர் பிலிப் குணவர்தன அவர்களின் 50வது நினைவு தினம்… சுதந்திர இலங்கையை உருவாக்கும் பொருட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசியப் போராட்டத்தை ஆதரித்து இலங்கை சோசலிச இயக்கத்தினை உருவாக்கிய ‘பொரலுகொட சிங்கம்’ என்று அழைக்கப்படும் தேசிய மாவீரர் பிலிப் குணவர்தன அவர்களின் 50வது நினைவு தினம் 2022.03.29 ஆம் திகதி கொழும்பு 07, இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. ஏகாதிபத்திய பொப்பி மலர் இயக்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட சூரியகாந்தி
இலங்கை மழைநீர் சேகரிப்பாளர்களின் ஒன்றியத்தினால் உலக நீர் தினத்தில் (மார்ச் 22) ஏற்பாடு செய்த நிகழ்வு
வியாழக்கிழமை, 24 மார்ச் 2022
இலங்கை மழைநீர் சேகரிப்பாளர்களின் ஒன்றியத்தினால் உலக நீர் தினத்தில் (மார்ச் 22) ஏற்பாடு செய்த நிகழ்வின் போது பிள்ளைகளுக்குரிய கார்ட்டூன் வீடியோ ஔிப்பதிவொன்று சி்ங்களம் மற்றும் தமிழ் மொழி ஊடகங்களில் வௌியிட்டு வைக்கப்பட்டது. கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு இலங்கை மழைநீர் சேகரிப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் டனுஜா ஆரியனந்த அவர்களுடன் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான பிரதிநிதி நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளரும் பங்குபற்றியிருந்தார்.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் ரஷ்யாவின் உயர் கல்வி அதிகாரிகள் குழுவினரை சந்தித்தார்.
திங்கட்கிழமை, 07 மார்ச் 2022
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான உயர் கல்வி ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன் அவர்களுக்கும் ரஷ்யாவின் உயர் கல்வி அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்தரையாடலொன்று 2022.03.03 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலுக்கு ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே அவர்களும் இந்நாட்டின் ரஷ்ய தூதுவராலயத்தின் முதற் செயலாளர் Anatasia Khokiova அவர்களும் இணைந்து கொண்டனர். ரஷ்யாவின் மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் (லுமும்பா பல்கலைக்கழகம்)
சபை முதல்வர் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தது தனது பிறந்தநாளாக அமைந்த 02.03.2022 அன்று ஹோமாகம மற்றும் கொடகம சிறுவர் மற்றும் தாய்மார் மருத்துவ மனை மற்றும் கொடகம வடக்கு-தெற்கு சிதமு பெண்கள் அமைப்புக்கு உபகரண நன்கொடை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதாகும். அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பாராளுமனடற உறுப்பினர் யாதாமினி குணவர்தனவின் அவர்களின் பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து இந்த உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தனவும் கலந்துகொண்ட
- Published in மாணவர்கள் செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் வகுப்புகளை நிறுத்தி, அறநெறிக் கல்விக்கு ஒதுக்குவதற்கு உடனடியாக கவனம் செலுத்தவும் – கல்வி அமைச்சருக்கு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் விசேட கோரிக்கை
வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022
ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதை நிறுத்த தலையிடுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்விற்கு 2022.01.23 ஆம் திகதி கங்கொடவில சாராநாத் பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்த போது, ஸ்ரீ தீராநந்த அறநெறிப் பாடசாலையின் பிரதி அதிபர் சிசிர குமார அறநெறிப் பாடசாலை பாடசாலை ஆசிரியர்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பாராளுமன்ற
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பிள்ளைகளின் மனங்களில் ஊக்கத்தினை ஏற்படுத்த கல்வி அமைச்சர் மாணவர்களை சந்திக்க சென்றார்.
திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022
2022 ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பிள்ளைகளின் மன ஆற்றலை அதிகரிப்பதற்காகவும் அவர்களை பாராட்டும் நோக்கிலும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் கொழும்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு விஜயம் செய்தார். நாட்டில் நிலவிய கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் நடாத்த முடியாமல் பிற்போடப்பட்ட 2021 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையானது ஜனவரி மாதம் 22 ஆம் நடாத்தப்படவுள்ளது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்காக 2943 பரீட்சை
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் பணிகள் ஆரம்பம்
செவ்வாய்க்கிழமை, 04 ஜனவரி 2022
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் பணிகள் ஆரம்பம் 2022.01.03 ஆந் திகதி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் பத்தரமுல்லை, இசுருபாய கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
- Published in Ministry News, Ministry News, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்
2021 ஆம் ஆண்டுக்குரியதாக பாடசாலைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணை நிறைவு செய்தல்.
புதன்கிழமை, 08 டிசம்பர் 2021
2021 ஆம் ஆண்டிற்கான பள்ளித் தேர்வுகளின் தேதிகள் 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணை நிறைவு செய்தல்.