அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குதல் – 2024 ஆலோசனைக் கோவை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது
Tuesday, 15 August 2023
2024 ஆம் வருடத்திற்குரியதாக அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான ஆலோசனைக் கோவை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்ப படிவத்திற்கமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை உரிய சகல ஆவணங்களுடன் தமக்குரியதான பாடசாலைகளின் பிரதானிகளுக்கு 2023 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கக் கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். சகல தகைமைகளையும் 2023 ஜூன் மாதம் 30 திகதியின் போது நிறைவு செய்திருத்தல் வேண்டும். உரிய ஆலோசனைகள்
- Published in Ministry News
No Comments
எதிர்காலத்தில் உயர்தர வணிகப் பிரிவு மாணவர்கள் வங்கிகளுக்கு சென்று வணிக பாடம் தொடர்பிலான கோட்பாட்டு அறிவினை நடைமுறை ரீதியில் பங்கேற்புடனான கண்காணிப்பிற்கு உட்படுத்துதல் வேண்டுமென கல்வி அமைச்சர் முன்மொழிவு.
Thursday, 15 June 2023
– உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையை நடாத்துதல் என ஒரே சந்தர்ப்பத்தில் பணிகளை மேற்கொள்ளும் சவாலுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெற்றிகரமாக முகம்கொடுத்துள்ளது. -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கம் செலுத்தும் வணிக மற்றும் வர்த்தக பாடங்களைக் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் குறித்த அந்த பாடங்கள் பற்றிய தத்துவார்த்த அறிவினையும் நடைமுறை ரீதியில் பயன்பாட்டில் கொண்டிருக்கும் வங்கிகள் போன்ற நிறுவனங்களுக்கு சென்று கோட்பாட்டு விடய அறிவின்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் முடிவுறுத்தல், முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பித்தல்
Tuesday, 06 June 2023
2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் 2023.05.26 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகின்ற அதேவேளை, முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் 2023.06.12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். 2022 – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2023.05.29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2023.06.08 ஆம் திகதி வரையில் நடைபெறும்.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2024 ஆம் ஆண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு பாடத்தினை தரம் 6 தொடக்கம் 9 வரையிலும் 10 தொடக்கம் 13 வரையிலும் நாட்டின் சகல பாடசாலைகளிலும் கற்பிப்பதற்கு நடவடிக்கை.
Tuesday, 06 June 2023
முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் 20 பாடசாலைகளை மையப்படுத்தி ஜுன் 20 ஆம் திகதி ஆரம்பம் சர்வதேச கல்வி மட்டத்திற்கு இணையாக இந்நாட்டின் கல்வித் துறையையும் கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களை 2024 ஆம் ஆண்டிலிருந்து 6 – 9 மற்றும் 10 – 13 வரையான தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் முன்னோடிக் கருத்திட்டம் ஜுன் மாத இறுதியில் தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
விசேட அறிவித்தல்
Wednesday, 31 May 2023
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் எந்தவொரு பாடசாலைக்கும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியினுள் வெளித்தரப்பினர் உள்நுழைவது தடையென்பதுடன், பரீட்சைக்குரிய ஆவணங்களைத் தவிர வேறெந்தவொரு ஆவணத்தையும்/ பத்திரத்தையும் மாணவர்களிடத்தில் பகிர்ந்தளித்தல் செய்யப்படலாகாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அவர்கள் அறிவித்துள்ளார்.
7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு
Wednesday, 31 May 2023
2024 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தினுள் நடாத்தி பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவோம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த வருடம் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் ஒரே வருடத்திற்குள் நடாத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளை படிப்படியாக யதார்த்த நிலைக்கு இட்டுச் சென்று பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவதாகவும் 7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜுன் 15 ஆம் திகதி நியமனங்களை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இலன்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
Tuesday, 23 May 2023
உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதி அதிகாரிகளின் பங்கேற்புடன் லண்டன் நகரில் இடம்பெறுகின்ற உலக கல்வி மாநாட்டில் (2023) பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜெமி சாவேத்ரா (Jaime Saavedra) அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளில் காணப்படுகின்ற புதிய கல்விக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அத்துடன் இந்நாட்டின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் மிகக்
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
Tuesday, 23 May 2023
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஆகியோரின் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. மேற்படிக் கட்டிடத்தில் 52 அறைகள் காணப்படுவதுடன் சர்வதேச தரங்களுக்கமைவாக சகல வசதிகளையும் கொண்டதாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, අමාත්යාංශ පුවත්, පුවත්, ශාස්ත්රීය පුවත්, ශිෂ්ය පුවත්
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச்செய்தல.
Thursday, 06 April 2023
2023 ஆம் ஆண்டு தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்குள் நிர்வகிப்பதற்குரியவாறு சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்,மேல், தென் மற்றும் வடமாகாண சபைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுமேலும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதாமையினால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்படவில்லை.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இந்நாட்டின் பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித்திட்டத்தினை கண்காணிப்பதற்கு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் ஆகியோர் எம்பிலிபிட்டிய குருஆரகம வித்தியாலயத்திற்கு விஜயம்
Wednesday, 22 March 2023
வகுப்பறையினுள் முறையான கல்வியைக் கொண்டதாக மிகச் சிறந்த கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் பயன்களை கூடுதல் எண்ணிக்கையிலான பாடசாலை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அமெரிக்க அரசு அனுசரணை வழங்கியுள்ள அதேவேளை, மேற்படி பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் (Julie Chung) அவர்கள் எம்பிலிபிட்டிய, கல்வங்குவ, குருஆரகம வித்தியாலயத்திற்கான கண்காணிப்பு
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்