கோவிட் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தரம் 10, 11, 12,13 வகுப்புகளின் பாடசாலை நேரத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 திகதியிலிருந்து காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரையாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சகல மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவெனாக்களின் பிரதானிகள் மற்றும் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 10, 11, 12 மற்றும் 13ஆம் தரங்களின் பாடசாலை நேரம் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை மட்டும் காலை 7.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை அமுலில் இருக்கும்.