பூட்டானின் கல்வி அமைச்சர் ஜெய் பிர் ராய் அவர்களுக்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெற்று வரும் கல்வி மாற்றச் செயற்பாடுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. முதலில் கல்வி நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையில் கல்வி மாற்றத்திற்கான செயல்முறை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும், சார்க் நாடுகளின் கல்விச் செயற்பாடுகள் குறித்து இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.