MOE
  • அமைச்சு
  • மாணவர்கள்
  • கல்வியாளர்கள்
  • தொடர்புகளுக்கு

MOE

  • அமைச்சு
  • மாணவர்கள்
  • கல்வியாளர்கள்
A A A
Search
Generic filters
Exact matches only
  • LANGUAGES  
  • ENGLISH
  • සිංහල
  • தமிழ்
Search
Generic filters
Exact matches only
  • Home
  • News
  • Ministry News
  • “மக்கள் அரசாங்கத்திற்காக தமது பொறுப்புகளை ஆகக் கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். இனி நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டும்….” புதிய கல்வி அமைச்சர் தமது கடமைகளை பொறுப்பேற்கும்போது கூறினார்.
வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020 / Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்

“மக்கள் அரசாங்கத்திற்காக தமது பொறுப்புகளை ஆகக் கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். இனி நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டும்….” புதிய கல்வி அமைச்சர் தமது கடமைகளை பொறுப்பேற்கும்போது கூறினார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டது யாதெனில்,  நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பினை தமது அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக  அவர்களது பொறுப்புகளை நிறைவேற்றுதல் வேண்டுமெனவும் ஆகும். அதற்கிணங்க மக்கள் தமது பொறுப்புகளை ஆகக்கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளதால் நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டுமென  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

புதிய அரசாங்கத்தின் கல்வி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சராக இன்று (13) கல்வி அமைச்சில் தமது பதவியில் கடமைகளை பொறுப்பேற்கையில்  அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெருமவும் இணைந்துக் கொண்டார். கல்விச் செயலாளர் என்.எச்.எம்.சித்ராநந்த, இராஜாங்க செயலாளர் திரு.ரஞ்சித் சந்ரசேகர மற்றும் மேலதிக செயலாளார்கள் உள்ளிட்ட பல சிரேட்ட அலுவலர்கள் இந் நிகழ்வில் கலந்தகொண்டனர்.

எமது கல்வி முறையில் இற்றைக்கும் பிள்ளைகளின் அறிவினை, பகுப்பாய்வு வலிமையினை கையள்வதற்குப் பதிலாக மனப்பாடம் செய்யும் முறையை பின்பற்றி அளவிடப்படுவதால், பெற்றுக்கொண்ட அறிவு மற்றும் நடைமுறை பயன்பாடு என்பவற்றுக்கிடையில் பாரிய இடைவெளி உள்ளதாகவும், இந்த முறை மாற்றி  அமைக்கப்படுதல் வேண்டுமெனவும் அவ்வாறு மேற்கொள்வதற்கு பாரம்பரிய கட்டமைப்பிலிருந்து  மீளுதல் வேண்டுமெனவும் அமைச்சர் இதன்போது தொpவித்தர்.

இந்த நாட்டு கல்வி முறையின் எதிர்காலம் அமைய வேண்டிய முறை தொடர்பாக வலுவான நிகழ்ச்சித் திட்டம் மற்றும் அதற்கான அடிப்படையை தயாரிப்பதற்கு  முன்னாள் கல்வி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் திரு.டலஸ் அலஹப்பெரும மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு தமது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

கல்வியைக் கொண்டு எவரொருவானின் வாழக்கைக்கும் ஆகக் குறைந்த மட்டத்திலேனும் பெறுமதி சேர்க்கப்படாவிடின் அதனால் ஏற்படும் பாரிய விளைவுகளை சமூகம் எதிர்நோக்க வேண்டுமெனவும், விசேடமாக போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்ற வெளியக விடயங்கள் காரணமாக உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்காத பெரும்பாலான பிள்ளைகளின் எதிர்காலம் பொருட்டு மாற்று வழிகளை அறிமுகப்படுத்தும் பொறுப்பு உள்ளதாகவ[ம் சுட்டிக்காட்டிய அமைச்சர் படிப்படியாக  முறையான திட்டத்தின்படி மிகவும் செய்முறை ரீதியாகன காலோசிதமான தீர்மானங்களை இந்த நாட்டின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஆசிரியர் தொழில் தமக்கு புதிதல்ல எனவும், அவர்களின் பலம், ஆக்கத்திறன் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பாக 26 ஆண்டுகளுக்கு அதிகமான காலப்பகுதியிலான அனுபவம் தமக்கு உள்ளதாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராக தொழில் வாழ்க்கையில் பிரவேசித்து, துணைவேந்தராக  சேலையாற்றி  அதன் பின்னர் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட தமக்கு, இந்த நாட்டில் கல்வி வளர்ச்சியினை அபிவிருத்தி செய்வதன் பொருட்டு அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்படைப்பின் பங்களிப்பு என்பவற்றை எதிர்பார்ப்பதாகவும் மேலும் தொரிவித்தார்.

Search

Search
Generic filters
Exact matches only

Notices & News Categories

  • Competitions
  • Human Resource Development
  • Human Resource Development
  • Ministry News
  • Special Notices
    • Academics Special Notices
    • Ministry Special Notices
    • Parents Special Notices
    • Students Special Notices
  • Uncategorized @ta
  • செய்தி
    • கல்வியாளர்கள் செய்திகள்
    • மாணவர்கள் செய்திகள்

Recent Notices & News

  • 2016-2018 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்கள் இலங்கை ஆசிரிய சேவையின 3 ஆம் வகுப்பில் 1 (ஆ) தரத்திறகு ஆட்சேர்ப்புச் செய்தல்

    அதிபர்களுக்கான கடிதத்தை இங்கே பதிவிறக்கவும்http...
  • 2018 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. (உ.தர) பெறுபெறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிலுனர்களை ஆட்சேர்த்தல் – 2020

    2018 க.பொ.த (உ.தர) பெறுபேற்றின் அடிப்படையில் கல...
  • பாடசாலைகளில் நடாத்தக் கூடிய மற்றும் நடாத்த முடியாத விழாக்கள் மற்றும் நிகழ்வுகள்…

    பாடசாலைச் சூழலுக்கு வெளியே பாரிய அளவில் மாணவர்க...
  • வடக்கு – தெற்கு தொடர்பாடல் பிரச்சினைக்கான தீர்வு மொழிக் கல்வியாகும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

    “சிங்கள – தமிழ் மக்களுக்கிடையிலான தொடர்பாடலை உர...
  • ‘பாடசாலைகளில் பேண்ட் வாத்திய இசைக்குழு நிகழ்கள், ஊர்வலங்கள் ஆகிய நிகழ்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்துங்கள்’…

    தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைக்கு பொறுப்புட...

Archives

  • பிப்ரவரி 2021
  • ஜனவரி 2021
  • டிசம்பர் 2020
  • நவம்பர் 2020
  • அக்டோபர் 2020
  • செப்டம்பர் 2020
  • ஆகஸ்ட் 2020
  • ஜூலை 2020
  • ஜூன் 2020
  • மே 2020
  • மார்ச் 2020

கல்வி அமைச்சு
இசுருபயா,
பத்தரமுல்லை
10120 இலங்கை..

  • +94 112 785141
  • +94 112 785150
  • info@10.1.0.66

அழைப்பு 1929

தேசிய

குழந்தை வரி

அழைப்பு 1988


தேசிய
செயல்பாடு

மின்னஞ்சல்



உள்நுழைக

  • எம்மைப்பற்றி
  • கேள்வி/பதில்
  • தொடர்புகளுக்கு
  • தள வரைபடம்

Copyright © 2020 Ministry of Education. All Rights Reserved. Design & Developed by SLIIT 

TOP