logo
MOE
  • அமைச்சு
  • மாணவர்கள்
  • கல்வியாளர்கள்
  • தொடர்புகளுக்கு

MOE

  • அமைச்சு
  • மாணவர்கள்
  • கல்வியாளர்கள்
A A A
Search
Generic filters
Exact matches only
  • LANGUAGES  
  • ENGLISH
  • සිංහල
  • தமிழ்
Search
Generic filters
Exact matches only
  • Home
  • News
  • Ministry News
  • தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மேல் மாகாணப் பாடசாலைகளின் தரம் 11 வகுப்புகளுக்கு மாத்திரம் ஜனவரி 25 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பமாகும்.
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2021 / Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மேல் மாகாணப் பாடசாலைகளின் தரம் 11 வகுப்புகளுக்கு மாத்திரம் ஜனவரி 25 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பமாகும்.

கோவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகளைத் தவிர, மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் தரம் 11 வகுப்புகள் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்தையும் உள்ளடக்கியதாக பாடசாலைகளை ஜனவரி 11 முதல் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சானது சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை கற்பிக்கும் வகையில் அதற்கான முன்னுரிமைத் தேவையை கவனத்திற் கொண்டு  மேல் மாகாணத்தின் தரம் 11 வகுப்பு மாணவர்கள் தொடர்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது தரம் 1-11 வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு அவசியமாகும் பாடப்புத்தகங்களை சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள அதேவேளை அதற்கு மேலதிகமாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத் தளத்திலிருந்து எந்தவொரு பாடப்புத்தகத்தையும் தரவிறக்கம் செய்து கொள்வதற்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதன்படி​ அவர்களின் பல்கலைக்கழக நுழைவு நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலப்பகுதியில் பெற்றுக் கொடுப்பதற்கும் கொவிட் காரணமாக அவர்கள் இழந்த காலத்தினை பாதிப்பின்றி மீள கவர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்தப்பட வேண்டியிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது இந்த வருடம் மார்ச் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால் மாணவர்களுக்கு எந்தவொரு இழப்போ அல்லது கால வீணடிப்போ ஏற்படாத வகையில், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த கல்வி அமைச்சர், அப்பிள்ளைகளுக்கான உயர் தர வகுப்புகளை  ஜூலை மாதமளவில் ஆரம்பிப்பதற்கும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டில் பாடசாலைகளை ஆரம்பிப்பது என்பது மிகவும் சவால் மிக்கவொரு ஒரு தீர்மானம் எனவும், பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் கால தாதமின்றியும் மேற்கொள்ளும் பொருட்டு மேற்படி தீர்மானத்தினை பொறுப்புடனும், சுகாதார தரப்பினரது முழுமையான ஆலோசனைகளுடன் மேற்கொண்டதாகவும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் விரிவான வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டினார். கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (www.moe.gov.lk) மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து, பாடசாலைகளில் ஓய்வு நேரங்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான அறிவுறுத்தல்கள் உள்ளடங்கிய வழிகாட்டுதல்கள் சகல பாடசாலைகளுக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 6 புதன்கிழமை முதல் ஜனவரி 10 ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலகட்டத்தில், பாடசாலைகளில் மேற்படி  சுகாதார பராமரிப்பு ஏற்பாடுகளை  அடிப்படையாகக் கொண்டு பெற்றார்-ஆசிரியர் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் பாடசாலைக்குரியதான சுகாதார வேலைத்திட்டங்களை தயாரித்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்ட கல்வி அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Search

Search
Generic filters
Exact matches only

Notices & News Categories

  • 535
  • 537
  • 539
  • Aesthetic – Tamil
  • commerce
  • Competitions
  • Educational Publications Advisory Board
  • Human Resource Development
  • Human Resource Development
  • Mathematics Branch
  • Ministry News
  • Parents News
  • Special Notices
    • Academics Special Notices
    • Ministry Special Notices
    • Parents Special Notices
    • Students Special Notices
  • Uncategorized @ta
  • கொள்முதல் அறிவிப்புகள்
  • கொள்முதல் கோரல் அறிவிப்புகள்
  • செய்தி
    • கல்வியாளர்கள் செய்திகள்
    • மாணவர்கள் செய்திகள்
  • විද්‍යා ශාඛාව

Recent Notices & News

  • நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2023

    மேற்படி போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோர...
  • இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் ஐஐஃஐஐஐ சேவை மூப்புப் பட்டியல்

    அறிவித்தல் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையி...
  • All Island Schools Bharatha Natyam Competition 2022 Final Results

    All Island Schools Bharatha Natyam Competition ...
  • 2023 වර්ෂයේ පාසල් පළමුවන ශ්‍රේණියට ඇතුළත්වන සිසුන් සඳහා විධිමත් ලෙස පන්ති ආරම්භ කිරීම සහ දරුවන් හඳුනා ගැනීමේ වැඩසටහන

    2023 වර්ෂයේ පාසල් පළමුවන ශ්‍රේණියට ඇතුළත්වන සිස...
  • To promote the spoken English language skills of students studying in the first key stage (grades 1 and 2) in schools.

    To promote the spoken English language skills o...

Archives

  • பிப்ரவரி 2023
  • ஜனவரி 2023
  • டிசம்பர் 2022
  • நவம்பர் 2022
  • அக்டோபர் 2022
  • செப்டம்பர் 2022
  • ஆகஸ்ட் 2022
  • ஜூலை 2022
  • ஜூன் 2022
  • மே 2022
  • ஏப்ரல் 2022
  • மார்ச் 2022
  • பிப்ரவரி 2022
  • ஜனவரி 2022
  • டிசம்பர் 2021
  • நவம்பர் 2021
  • அக்டோபர் 2021
  • செப்டம்பர் 2021
  • ஆகஸ்ட் 2021
  • ஜூலை 2021
  • ஜூன் 2021
  • மே 2021
  • ஏப்ரல் 2021
  • மார்ச் 2021
  • பிப்ரவரி 2021
  • ஜனவரி 2021
  • டிசம்பர் 2020
  • நவம்பர் 2020
  • அக்டோபர் 2020
  • செப்டம்பர் 2020
  • ஆகஸ்ட் 2020
  • ஜூலை 2020
  • ஜூன் 2020
  • மே 2020
  • மார்ச் 2020

கல்வி அமைச்சு
இசுருபயா,
பத்தரமுல்லை
10120 இலங்கை..

  • +94 112 785141 - 50
  • info@moe.gov.lk
Government-information-center-ministry-of-education-sri-lanka-masenger-logo

அழைப்பு 1929

தேசிய

குழந்தை வரி

அழைப்பு 1988


தேசிய
செயல்பாடு

மின்னஞ்சல்



உள்நுழைக

  • எம்மைப்பற்றி
  • கேள்வி/பதில்
  • தொடர்புகளுக்கு
  • தள வரைபடம்

Copyright © 2020 Ministry of Education. All Rights Reserved. Design & Developed by SLIIT 

TOP